”பின்ன வீரமா பேசற உன் முறைபொண்ணை பார்த்ததும் நெளியற”
”என்ன செய்றது அவள் ஏதோ வசியம் செய்து வைச்சிருக்காடா”
”யாரு அவளா, நீ ஒண்ணுப்பா, விட்டா உனக்கு செய்வினை செய்து வைச்சாள்னு கூட சொல்வ, ஆமா பிரியாணி வாங்கித்தரேன்னு சொன்னியே என்னாச்சி”
”அதுக்கென்னடா இன்னிக்கு நான் செஞ்ச வேலையை மெச்சி என் முறைபொண்ணு என்னை பாராட்டப்போறா, அதைக்கேட்க தயாரா இரு அதுக்கு முன்னாடி பிரியாணி சாப்பிடலாம் வா” என சொல்லிக் கொண்டே பிரியாணி கடைக்குச் சென்றான், அங்கு இருவரும் நிம்மதியாக பிரியாணி சாப்பிட்டுவிட்டு நேரத்தைப் பார்த்தார்கள்
”நண்பா ரொம்ப நேரமாயிடுச்சி, உனக்காக உன் முறைபொண்ணு காத்திருக்குமோ இல்லையோ இந்த பொருளுக்காக காத்திருக்கும், வாப்பா நேரத்தோட வீடு போய் சேரலாம்” என சொல்லவும் வண்டி காவேரியின் வீட்டின் முன் சென்று நின்றது, இருவரும் ஏதோ மலையை அசைத்தது போல கெத்தாக வீட்டிற்குள் சென்றார்கள், அவர்களின் இந்த வரவைக்கண்டு மலைத்துப் போனாள் காவேரி, அவளின் முன் கெத்தாக நின்று
”இந்தா நீ கேட்டது ஒண்ணுவிடாம வாங்கியாச்சி சரியா இருக்கான்னு பாரு” என சொல்ல அவளோ வியப்புடன்
”எப்படி வாங்கினீங்க”
”எங்களை பத்தி என்ன நினைச்ச எங்களுக்கு போற இடத்தில எல்லாம் மரியாதை இருக்கும்மா”
”ஓஹோ எங்கயுமே உங்களுக்கு அவமானம் நடக்கலையா”
”ஆசையை பாரு, தெரியும்டி நீ இதுக்குதான் இந்த லிஸ்ட்டை தந்திருப்பன்னு, நீ நினைச்சது