ஏதோ சொல்லிவிட்டான் இப்போது என்ன சொல்வது என தெரியாமல் தடுமாற அவளோ பொறுமையிழந்து
”நான் போறேன்”
”இரு இரு பொறு இதோ சொல்றேன்”
”இன்னும் எவ்ளோ நேரம்”
”ஆயிடுச்சி இன்னும் கொஞ்சம்தான்” என கெஞ்ச அவளோ நொந்துப் போனாள். வேங்கையனோ வாசலையும் அவளையும் பார்த்தபடி என்ன சொல்வதென தெரியாமல் தவிக்க அந்நேரம் வாசலில் மஹதி வந்து நின்றாள்.
முதல் முறை அவளைக் கண்டதும் வாயடைத்துப் போனான், வேங்கையன் மங்களம் கூட மஹதியை கண்டு வியந்தார். எதையும் சொல்ல முடியாமல் தடுமாறினான் வேங்கையன், ஜானகியோ மஹதியை கண்டு வாய் பிளந்தாள். அவளுக்கு பெரிய ஆச்சர்யம், அந்நேரம் வேங்கையனோ தன்னை மறந்து மஹதியை பார்த்து பாடிவைக்க அதைக்கேட்டு அனைவருமே வியந்தார்கள்.
யார் யார் யார் அவள் யாரோ
ஊர் பேர் தான் தெரியாதோ
சலவைக் கல்லே சிலையாக
தங்க பாளம் கையாக
மலர்களிரன்டும் விழியாக..
மயங்க வைத்தாளோ
என பாட மஹதியே ஆர்வமானாள். ஜானகிக்கு அதிர்ச்சியாக இருந்தது, வேங்கையனுக்கு