”என்னம்மா” என கேட்க
”இல்லை வேங்கையா அவள் கிளம்பறதைப் பார்த்து எங்க போறன்னு கேட்டேன் அது தப்பாயிடுச்சி” என சொல்ல உடனே ஜானகியோ
”நான் எங்க போனா என்ன அவங்களுக்கு எல்லாத்தையும் சொல்லனுமாக்கும் சே போகும் போதே அபசகுனமா பேசினா போற காரியம் உருப்படுமா என்ன இதுகூட தெரியலை இவங்கள்லாம் பெரிய மனுஷங்க” என அலுத்துக் கொள்ள வேங்கையனோ
”இப்ப எதுக்கு கோபப்படற ஜானகி, அம்மா தெரியாமதானே கேட்டாங்க, ஏன் சொல்லிட்டுப் போறதால நீ என்ன குறைஞ்சா போயிடப்போற, எனக்குத் தெரியும் நீ எங்க போறன்னு உன்னோட அலங்காரத்தை பார்த்தாலே தெரியுது, மூர்த்தியை பார்க்கத்தானே போற, அதை சொல்லிட்டே போகலாமே, யார் உன்னை கேள்வி கேட்பா”
”நான் ஒண்ணும் மூர்த்தி மாமாவை பார்க்கப் போகலை என் தோழியை பார்க்கப் போறேன்“
”தோழியா” என ஒண்ணும் தெரியாதமாதிரி வேங்கையன் கேட்க அதற்கு ஜானகி
”ஆமாம் என் வீட்டுக்கு வந்திருக்கா, நேத்துகூட போய் வந்தேன் இன்னிக்கு அவளை கூட்டிக்கிட்டு ஊர் சுத்திக்காட்டப்போறேன், அதான் ரெடியாயிட்டேன்” என சொல்ல வேங்கையன் திடுக்கிட்டான் சட்டென வாசலைப் பார்த்து
”இன்னும் ஏன் அவங்க வரலை, அவங்க வர்றதுக்கு முன்னாடி இவள் கிளம்பிப் போனா காரியம் கெடுமே, எப்படியாவது இவளை இங்க நிப்பாட்டி வைக்கனும் அவங்க வர்றவரைக்கும் தாக்குபிடிக்கலாம்” என நினைத்தவன் என்றும் இல்லாமல் இன்று பார்த்து
”உன்னை இப்படி அலங்காரமா பார்த்ததும் என் மனசுல ஒண்ணு தோணுது சொல்லவா” என கேட்க அவளோ வேண்டாவெறுப்பாக
”ஒண்ணும் தேவையில்லை எப்படியிருந்தாலும் நீங்க மகா மட்டமா எதையாவது சொல்லி