தெரியுமா”
”வேப்பிலை அடிச்சேனா“
”பின்ன அந்தாளு ஆபிசுக்கு எப்படி வந்தான்னு தெரியுமா, அய்யோ பாவம் அதை விட நான் அவனை சார்ன்னு கூப்பிட்டதுக்கு அப்படி கோச்சிக்கிட்டான், இனிமேல நீ என்னை சார்ன்னு கூப்பிடாத கோவலன்னுதான் கூப்பிடனும்னு சொல்லிட்டான், அதான் சாக்குன்னு நானும் வார்த்தைக்கு வார்த்தை கோவலன் கோவலன்னு சொல்லி வைச்சேன், அதுக்கே சந்தோஷப்படறான் அப்படி என்னதான் செய்த, அவனை ரொம்ப வெறுப்பேத்திட்ட போல”
”பின்ன காலேஜ் எப்படியிருந்தது தெரியுமா, சுத்தமா ஒழுக்கமேயில்லை, அதை பத்தி கேட்டதுக்கு தேவையில்லாத வியாக்யானம் பேசினாப்ல அப்பதான் யோசிச்சேன், மாத்த வேண்டியது காலேஜும் கூட தாளாளரையும் சேர்த்துன்னு, அதான் கொஞ்சமா அவரை வெறுப்பேத்தி விட்டேன்”
”பாவமா இருந்தார்டி”
”விட்டுத்தள்ளு நாளைக்கு காலேஜ்ல பெரிய புயலே வீசப் போகுது, அதுல சிக்கி தாளாளர் என்னவாகப் போறாரோ தெரியலை“
”அய்யோ அப்படின்னா கம்பெனிக்கு வரும் போது சூறாவளியா வருவார் போலயே நான் மாட்டினேன்”
”என்ன சொல்ற”
”ஆமாம் என்னை அவரோட பர்சனல் செக்ரக்ட்ரியா ப்ரமோட் பண்ணியிருக்காரு“
”அப்படியா என்ன திடுதிப்புன்னு”
”யாருக்கு தெரியும் இதுவரைக்கும் அவருக்கு பிஏன்னு யாரும் கிடையாது அவர் யாரையும் நம்பினதில்லை”