எல்லாருக்கும் வந்துடுச்சி, நாங்க அப்பவே பார்த்துட்டோம், இருந்தாலும் இதை மெனக்கெட்டு என்கிட்ட சொல்ல கூப்பிட்டதுக்கு ரொம்ப நன்றி கோவலன்” என்றாள்
”வாழ்த்துக்கள்”
”எதுக்கு கோவலன்”
”உன்னை ப்ரமோட் பண்ணியிருக்கேன்”
“என்னவா”
”என்னோட பர்சனல் செக்ரட்ரியா”
”என்னது பிஏவா அதெல்லாம் என்னால முடியாது கோவலன்”
”மாதவி ப்ளீஸ் என்னை புரிஞ்சிக்க“ என அவன் கெஞ்ச அதில் அவள் சற்று அமைதியாகி சரியென்பது போல் தலையாட்டிவைக்க அதில் கோவலன் சற்று ஆறுதல் அடைந்தான். அவனின் பரிதாபகரமான நிலைமையை நினைத்து பரிதாபமே கொண்டாள் மாதவி.
மாலை நேரம் வீடு திரும்பினாள் மாதவி, ஆனால் இன்னும் கண்ணகி வராமல் போகவே அவளுக்கு அச்சமாக இருந்தது, சரி புது வேலை எப்படியும் வருவாள் என பார்த்திருந்தாள் ஆனால் அவளோ 8 மணிக்குதான் வந்தாள்.
”கண்ணகி என்னடி இவ்ளோ லேட்டா வர்ற”
”காலேஜ்ல புது பிரச்சனை மாதவி அதை சால்வ் பண்ணிட்டு வரேன் அதான்”
”என்னாச்சி”
”நாளைக்கு மாணவர்கள் எல்லாரும் சேர்ந்து ஸ்ட்ரைக் பண்ணப் போறாங்களாம்”