”ஸ்டூடன்ஸ் டவுன் டவுன்” என்றாள் அதைக்கேட்டு கோவலன் அதிர்ந்தான் உடனே அவன் கையில் இருந்த பலகையைக்கண்டு வியந்தான். அவளோ அவனைப் பார்த்து
”என்ன யோசிக்கறீங்க கத்துங்க”
”எது நானா நான் தாளாளர்”
”இப்ப நீங்க கத்தலை பிரச்சனையில உங்களையும் இழுத்துவிட்டுடுவேன் எப்படி வசதி”
”உன்னை”
”கத்துங்க சார்” என்றாள் அதில் அவனும் நொந்தபடியே
”ஸ்டூடன்ஸ் டவுன் டவுன்” என்றான் அவளும்
”ஸ்டூடன்ஸ் டவுன் டவுன்” என்றாள் அதைக்கேட்டு அவ்விடமே அமைதியாகிப் போனது.
மாணவர்களுக்கு என தலைவன் ஒருவன் இருந்தான் அவன் எழுந்து நின்று
”என்ன எங்களை டவுன் டவுன்னு சொல்றீங்க நாங்க என்ன தப்பு செய்தோம்” என உரக்க கத்த அதைக்கேட்ட கண்ணகியோ
”நீ யாரு”
”நான்தான் ஸ்டூடன்ட் சேர்மன்”
”ஓ அப்படியா”
”என்ன அப்படியா எதுக்காக எங்களை டவுன் டவுன்னு சொல்றீங்க”