பயணம் நிகழ்கிற பாதை முழுதும்
மேடையாய் மாறும்
எவரும் அறிமுகம் இல்லை எனினும்
நாடகம் ஓடும்
விடை இல்லாத பல வினாவும்
எழ தேடல் தொடங்கும்
விலை இல்லாத ஒரு வினோத
சுகம் தோன்றும் ஓ
யார் அழைப்பது யார் அழைப்பது
யார் குரல் இது
குரலின் விரலை பிடித்து
தொடரத்தான் துடிக்குது
என மாறா படப்பாடலை அவள் உருகி உருகி பாடி முடிக்கும் வரை அந்த பாடலையும் ஏன் அவளையும் சேர்த்து ரசித்தான் கோவலன். அவள் பாடி முடித்த உடன் அவனைப் பார்த்து
”இப்ப உங்க தலைவலி போயிடுச்சா கோவலன்” என கேட்க அதற்கு அவனோ மென்மையாக சிரித்தான்.
”அட தேவாங்கு உனக்கு சிரிக்க கூட வருமா” என மனதுள் பேசுவதாக நினைத்து உணர்ச்சி வசப்பட்டு வெளிப்படையாக பேசி வைக்க அவனோ அதிர்ந்து
”என்னது தேவாங்கா” என கேட்க அவளோ அதிர்ந்து
”சாரி சாரி அது வந்து நான் இங்க நான் போறேன் எனக்கு வேலையிருக்கு” என படபடவென சொல்லிவிட்டு அவள் தன் இருக்கைக்குச் சென்றாள்.