”பசிக்குது சமையல் ஆச்சா இல்லையா” என்றான் அதைக்கேட்டதும் ஜானகி வெலவெலத்துப் போனாள், செல்வமோ
”காதுல விழுந்ததா அவன் பசி தாங்கமாட்டான் சட்டுபுட்டுன்னு சமைச்சிட்டு வந்து கூப்பிடு” என சொல்லிவிட்டு தன் மனைவியை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார்.
ஜானகிக்கு கண்கள் இருள தொடங்கியது, பின் தன் முகத்தை தண்ணீரால் அலம்பி விட்டு மடமடவென சப்பாத்தி மாவு பிசையலானாள், அவள் பிசைந்து முடிக்கவும் மூர்த்தி வரவும் சரியாக இருந்தது
”இன்னும் என்னதான் செய்ற பசிக்குது”
”இதோ மாமா ஆயிடுச்சி மாவு பிசைஞ்சிட்டேன் சுட்டு எடுத்துடறேன்”
“சரி தொட்டுக்க என்ன செய்திருக்க”
”ஆஆஆ அதுவா இனிமேலதான் செய்யனும்”
”இன்னும் செய்யலையா”
”சாரி மாமா நான் சாதம் சாம்பார் வைச்சேன் ஆனா நீங்க சப்பாத்தி சாப்பிடுவீங்கன்னு இப்பதான் உங்கம்மா சொன்னாங்க”
”அய்யோ சே பசி வேற வயித்தை கிள்ளுது இதுக்கு மேல நீ எப்ப குழம்பு செய்வ”
”செய்துடறேன் மாமா 10 நிமிஷத்துல முடிச்சிடறேன்”
”சாப்பாடு முடிஞ்சதும் என் ரூம்ல கொண்டு வந்து வை“
”ரூமுக்கா ஏன் மாமா இங்கயே எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடலாமே”