”கண்ணகி என்ன பேசற நீ இதுல உன் தப்பு எதுவும் இல்லையே“
”ஆனாலும் நான்தானே இங்க பிரின்சிபால், அவங்க சொன்னது சரிதான் என் அனுமதியில்லாம இந்த தப்பு எப்படி நடந்திருக்கும் சொல்லுங்க, அதோட நான் சொன்னதாதான் பணம் வாங்கினதா எல்லாரும் சொல்றாங்க“
”இல்லை இருக்காது இதுக்கு காரணம் அந்த சிலம்புதான்” என சொல்ல சிலம்பு உடனே
”நானா இல்லையே, எனக்கே இந்த விசயம் இப்பதான் தெரியும், எனக்கும் இந்த தப்புக்கும் சம்பந்தம் இல்லை எல்லாத்துக்கும் காரணம் இந்த பிரன்சிபால்தான், அவங்களுக்குதான் அதிகாரம் இருக்கு வேற யாரால இவ்ளோ பெரிய செயலை செய்ய முடியும்” என படபடவென பேசிவிட அதைக்கேட்டு கோவலனே அதிர்ந்தான்
கண்ணகியை அப்போதே கைதும் செய்தார்கள், அவள் கைதாகி செல்வதை அந்த கல்லூரியே வேடிக்கைப் பார்த்தது, அனைவரும் சென்ற பின் மாணவர்கள் அனைவரும் சந்தோஷத்தில் கூச்சலிட்டார்கள், அதைக்கண்ட கோவலன் அதிர்ந்தான் சிலம்புவோ அவனிடம் வர
”என்னடா இது என்ன நடக்குது இங்க“
”இதெல்லாம் என்னோட திட்டம்தான், இப்ப பாரு மாணவர்கள் எவ்ளோ சந்தோஷமா இருக்காங்கன்னு”
”புத்தியிருக்கா உனக்கு நீ செஞ்ச தப்புக்கு பாவம் அவள் மாட்டிக்கிட்டா”
”அவளைதான் உனக்குப் பிடிக்காதுல்ல அப்புறம் என்ன அவள் போகட்டும் விடு நண்பா, நம்ம காலேஜ் பழைய படி மாறினாதான் நல்லாயிருக்கும்”
”அய்யோ என்ன பேசற நீ இதெல்லாம் தப்பு”