தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்
36. மனம் விரும்புதே உன்னை... உன்னை...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
வீணா சொன்னதுப் போலவே சில நொடிகளில் சஞ்சீவ் அவர்கள் இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தான்.
"இந்த கர்சீஃப் அங்கே இருந்தது... இது உங்க யாருடையதாவதா?" பொதுவாக கேட்டுவிட்டு, இந்து பக்கம் பார்த்தான் சஞ்சீவ்.
அவனின் கேள்வியை தொடர்ந்து, தன் கைக்குட்டையை தேடிய இந்து, சஞ்சீவ் கையிலிருப்பது தன்னுடையது தான் என்பதை அறிந்துக் கொண்டாள்.
"தேங்க்ஸ் சஞ்சீவ்... அது என்னோட கர்சீஃப்... எங்கேயோ மிஸ் பண்ணிட்டேன் போல இருக்கு...." என்று கைக்குட்டையை வாங்க கையை நீட்டினாள். கைக்குட்டையை அவள் கைகளில் வைத்த சஞ்சீவ், தேவையின்றி அவள் விரல்களை மெல்ல வருடவும் செய்தான். இருக்கும் இடம் உணர்ந்து இந்து நெளியவும்... அவளை பார்த்து மெல்லிய மந்தகாச புன்னகை மின்ன கண் சிமிட்டி விட்டு நகர்ந்து சென்றான் சஞ்சீவ்!
நடந்ததை கண்டும் காணாததுப் போல பார்த்த கீதாவிற்கு ரொம்பவே ஆச்சர்யம் தான். வீணா வாய் விட்டு சிரித்தாள்!
"பரவாயில்லையே... அதுக்குள்ளே இவ்வளவு முன்னேற்றமா?" என்றாள் கீதா கேலியாக.
வீனாவோ, இந்துவோ பதில் சொல்லும் முன், "சரி கிளம்பலாமா?" என்று கேட்டப் படி காஞ்சனாவும் கல்பனாவும் அங்கே வரவும், தோழிகளின் பேச்சு அத்துடன் நின்றது.
கீதாவும், வீணாவும் பெரியவர்களிடம் பேசிக் கொண்டிருக்க, இந்து அங்கிருந்து சஞ்சீவ் இருக்கும் இடம் நோக்கி சென்றாள். ஃபங்க்ஷனில் மீதம் வந்திருந்த உணவை பக்கத்தில் இருந்த ஆசிரமத்திற்கு கொடுக்க சொல்லி கொண்டிருந்த சஞ்சீவ், இந்துவைப் பார்த்ததும் அவனே அவள் அருகில் வந்தான்.
"சரி சஞ்சீவ், நான் கிளம்புறேன்..." என்றாள் இந்து!