சஞ்சீவ் பதில் எதுவும் சொல்லாமல் பேசிய அவளின் உதடுகளைப் பார்த்த படி நின்றான்.
"ப்ச்... சஞ்சீவ் ப்ளீஸ்... இன்னைக்கு ஏன் இப்படி இருக்கீங்க?" என்றாள் இந்து.
"இந்து... என்னுடைய பொறுமையை நீ ரொம்ப சோதிக்க கூடாது..."
"ரொம்ப தானே சோதிக்க கூடாது... கொஞ்சம் சோதிக்கலாம் தானே... அப்புறம் என்ன?"
"இதுக்கு எல்லாம் சேர்த்து நீ தான் கஷ்டப் பட போற..."
"அதை அப்புறம் பார்க்கலாம்... சரி டைமாச்சு, நான் கிளம்புறேன்..."
"ஓகே... வீட்டுக்குப் போய் சேர்ந்ததும் எனக்கு மெசேஜ் அனுப்பு..."
இந்து மெல்லிய புன்னகை மின்ன சரி என தலை அசைத்தாள்...
"அப்புறம் இந்து... ஒரு சின்ன ரெக்வெஸ்ட்... நம்ம ரிலேஷன்ஷிப் என்னன்னு நீ தெளிவா முடிவு எடுக்குற வரைக்குமாவது, நான் இருக்கும் போது சாரீ கட்ட வேண்டாம்... சுரிதார் தான் சரி... ப்ளீஸ்..."
சஞ்சீவின் கோரிக்கையை கேட்டு சிரித்த இந்து, இப்போதும் பதில் சொல்லாமல் தலையை மட்டும் அசைத்து விட்டு கிளம்பினாள்.
கண்மணி விஷயம் தெளிவாகிப் போனதில் அவளின் மனம் அமைதி அடைந்திருந்தது... இனி காஞ்சனா மட்டும் சம்மதம் சொன்னால் வேறு பிரச்சனை இல்லை என மனதில் நினைத்துக் கொண்டே மற்றவர்களிடம் விடை பெற்றுக் கிளம்பினாள் இந்து.
நாம் நினைப்பவை எல்லாம் அப்படியே நடந்து விட்டால் எப்படி? அதை இந்துவும் உணரும் காலம் சீக்கிரமே வந்தது....