🌼🌸❀✿🌷
கீதா ராஜீவ் திருமண நாள் விழாவிற்கு பின் வந்த நாட்களில் இந்து வானத்தில் மிதந்து கொண்டிருந்தாள். அவள் மனதில் ஆயிரம் ஆயிரம் கனவுகள், கற்பனைகள் அலை மோதிக் கொண்டிருந்தன.
பொதுவாக, சின்னது பெரியது என்ற பாகுபாடில்லாமல், எல்லா விஷயத்தையும் அம்மாவிடமோ, தன் தோழிகளிடமோ பகிர்ந்து பழகி இருந்த இந்துவிற்கு ஏனோ இப்போது அவளின் மனதில் பொங்கி கொண்டிருந்த உணர்வுகளை அவர்கள் யாரிடமும் சொல்ல மனசு வரவில்லை... அவளுள் ஏற்பட்டிருந்த மாற்றம் அவளுக்கே அதிசயமாக தான் இருந்தது!
சஞ்சீவின் பக்கத்திலேயே இருக்க வேண்டும்... அவன் பேசுவதை கேட்டப்படியே இருக்க வேண்டும் என்றெல்லாம் அவளுக்கு ஆசையாக இருந்தது... ஆனாலும் சஞ்சீவ் எதிர்பார்ப்பது போல் விட்டுக் கொடுத்து அவனை ஃபோனில் அழைத்துப் பேச மட்டும் அவளுக்கு மனசு வரவில்லை...
இப்படி இந்து கனவுலகில் சஞ்சரிப்பதை மற்றவர்கள் கவனித்தார்களோ இல்லையோ, நந்தினி கவனித்தாள். பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் இரண்டுப் பேரும் ஒரே அலுவலகத்தில் இருந்ததால், அவர்கள் இருவரும் அவ்வப்போது சந்திக்க வேண்டி இருந்தது. இந்துவிற்கு முன் போல் நந்தினியின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனிக்கும் ஆவல் இருக்கவில்லை. ஆனால் நந்தினிக்கு எந்த மயக்கமும் இல்லாததால், அவள் வழக்கம் போல் இந்துவை கவனித்துக் கொண்டு தான் இருந்தாள்.
இன்னும் இரண்டு வாரங்களில் அவர்களின் கம்பெனியின் ஆண்டு விழா வர இருந்ததால், அதற்கான ஏற்பாடுகளை மேற்பார்வையிட அர்ச்சனா அன்று மாலை அலுவலகம் வந்திருந்தார். அர்ச்சனா, இந்து, நந்தினி மற்றும் சில உயர் நிலை மேனேஜர்ஸ் கலந்து ஆய்வு செய்தப் போது, சென்ற மீட்டிங்கின் போது அர்ச்சனா சொல்லி இருந்த சில விஷயங்கள் இன்னமும் நடை முறை படுத்தப்படவில்லை என்பது புரிந்தது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து தான் கவனித்துக் கொண்டிருந்தாள். எனவே அர்ச்சனா கேள்வியாய் இந்துவை பார்த்தார்... இந்து என்ன பதில் சொல்வது என்று யோசிக்கும் போதே, வாய்ப்பை நழுவ விட விரும்பாது