நந்தினி பேசினாள்.
"இப்போ கொஞ்ச நாளாவே இந்து மேடம் கம்பெனி விஷயம் எல்லாம் சரியாவே கவனிக்குறது இல்ல போல இருக்கே.... கேள்வி பட்டேன் நேத்து கூட எதோ ஒரு டெண்டர் கடைசி நிமிஷத்தில தான் அனுப்பினோமாமே..."
வழக்கம் போல் நந்தினியின் கிண்டல் பேச்சில் கோபப் பட்ட போதும், அம்மாவை ஒரு பார்வை பார்த்து விட்டு,
"அதெல்லாம் இல்லை.... அந்த டெண்டர்ல கொஞ்சம் குழப்பமான ரெகுலேஷன்ஸ் எல்லாம் இருந்தது... அது தான் செக் பண்ணி அனுப்ப லேட் ஆயிடுச்சு...." என்றாள் இந்து.
"நீங்க சொன்னால் சரி தான் மேடம்..." என இந்துவிடம் அதே கிண்டல் தோரணையில் சொன்ன நந்தினி, அர்ச்சனாவிடம், "அம்மா, எனக்கு என்னவோ இது வேற விஷயம்னு தோணுது... எதுக்கும் நீங்க இந்து மேடம் கிட்ட அப்புறம் தனியா இருக்கும் போது பேசி பாருங்க...." என கண் சிமிட்டலோடு சொல்லி புன்னகை புரிந்தாள்!
பொதுவாக நந்தினி அர்ச்சனாவிடம் கொஞ்சம் செல்லமாக பேசினாலே இந்துவிற்கு பிடிக்காது! இப்போது அவள் அர்ச்சனாவை 'அம்மா' என்று அழைத்துப் பேசவும், இந்துவிற்கு கோபம் தலைக்கேறியது. அதுவும் இல்லாமல், அது என்ன தேவை இல்லாமல் அவள் விஷயத்தில் இவள் மூக்கை நுழைப்பது...!!!!
"நந்தினி மேடம்... எதுவா இருந்தாலும் நான் சில பேரை மாதிரி அடுத்தவங்களை கஷ்டப் படுத்துற மாதிரி எதுவுமே செய்ய மாட்டேன்... அதனால நீங்க என்னைப் பத்தி கவலைப் பட வேண்டாம்...." என்று மறைமுகமாக நந்தினியை தாக்கி சொன்னாள் இந்து!
இந்து சொல்வதன் போரும் புரிந்தாலும், பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், "ஓ! ஆமாம் ஆமாம்... ஷேர்ஸ்க்காக, பணத்துக்காக எல்லாம் கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைக்குறவங்க எல்லாம் ரொம்ப நல்லவங்க தான்..." என்றாள் நந்தினி வழக்கம் போல் தன் நக்கலான குரலில்!!!