(Reading time: 9 - 17 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

மற்ற அலுவல்களை முடித்து விட்டு, அர்ச்சனா வீட்டை அடைந்தப் போது நேரம் ஏழு மணியை தாண்டி இருந்தது. இந்து மாடியில் தன் அறையில் தான் இருக்கிறாள் என்பதை கனகாவிடம் கேட்டு அறிந்துக் கொண்டு, நேரே அங்கு சென்றார் அர்ச்சனா.

  

உடையை கூட மாற்றாமல், கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு கட்டிலில் அமர்ந்து இருந்த மகளை பார்த்து அர்ச்சனாவின் முகத்தில் தானாகவே புன்னகை வந்தது.

  

"என்ன கண்ணா... இன்னும் கோபம் போகலியா?" என்றார்!

  

திடீர் என கேட்ட அம்மாவின் குரலில் தன் யோசனையில் இருந்து விடுப்பட்டு திரும்பி பார்த்தாள் இந்து... ஆனாலும், உடனே தன் கோபத்திற்கான காரணம் நினைவு வரவும், எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள். அவளின் அருகில் வந்து அமர்ந்த அர்ச்சனா,

  

"என்ன இந்து இது? நீ என்ன சின்ன குழந்தையா? இப்படியா ஆஃபிஸ் மீட்டிங்ல நடந்துக்குறது? மத்த மேனேஜர்ஸ் எல்லாம் நம்ம குடும்பத்தை பத்தி என்ன நினைப்பாங்க?" என்றார் மென்மையாக!

  

"சரி, நான் தப்பா தான் நடந்து கிட்டேன்...! உங்க செல்ல வளர்ப்பு பொண்ணு மட்டும் தப்பே செய்யலையா? அவளை ஏதாவது சொன்னீங்களா நீங்க?" என சீறினாள் இந்து!

  

சில வினாடிகள் அமைதியாக இருந்த அர்ச்சனா, பின் ஏதோ முடிவு செய்தவராக,

  

"இந்து, நான் உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்... முதல்ல சாப்பிடுவோம், அப்புறம் பேசலாம்..." என்றார்!

  

"ப்ச்... அப்படி என்ன புதுசா சொல்ல போறீங்கம்மா? எப்போதும் போல தானே? எனக்கு இந்த அறுவை எல்லாம் வேண்டாம்... நான் உங்க செல்லப் பொண்ணை தொந்தரவு பண்ணலை போதுமா?"

  

"இது என்ன புது பிடிவாதம் இந்து...??? நான் ரொம்ப முக்கியமான விஷயம் உன்கிட்ட

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.