தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்
38. மனம் விரும்புதே உன்னை... உன்னை...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
அர்ச்சனா அறையில் இருந்து சென்ற பிறகும், சில நிமிடங்கள் இந்து சிலையாக அமர்ந்திருந்தாள்! அவள் விழிகளில் அவளையும் அறியாது கண்ணீர் எட்டிப் பார்த்தது! யாரிடமாவது பேசாவிட்டால் தலையே வெடித்து விடும் போல் தோன்றவும், தன் மொபைல் ஃபோனை கையில் எடுத்தாள். கீதாவை அழைக்கலாம் என நினைத்தவள், நேரம் ஒன்பதை தாண்டி விட்டதை உணர்ந்து தயங்கினாள். தொடர்ந்து, அதிக நேரம் யோசிக்காமல், சஞ்சீவின் ஃபோன் நம்பரை அழைத்தாள்.
அன்றைய தினத்தின் வரவு செலவு கணக்குகளை சரி பார்த்து கொண்டிருந்த சஞ்சீவ், தன் ஃபோனில் இந்துவின் நம்பரை பார்த்ததும் ஆச்சர்யத்தில் வாயைப் பிளந்தான்! ஆனாலும், அவசரமாக ஃபோனை எடுத்துப் பேசினான்...
"ஹலோ இந்து!!!! கடைசியா, மனசு இறங்கியாச்சா?? என்ன இன்னைக்கு அப்படி அதிசயம்????"
மகிழ்ச்சியோடு ஒலித்த சஞ்சீவின் குரல் இந்துவின் கருத்தில் படவே இல்லை...
"சஞ்சீவ், நான் உங்க கிட்ட அவசரமா பேசனும்... நீங்க இப்போ பிசியா????"
இந்துவின் குரல் வித்தியாசமாக ஒலிப்பதை புரிந்துக் கொண்டு,
"இந்து? என்னம்மா? என்ன ஆச்சு??? ஏதாவது பிரச்சனையா?" என கேள்விகணைகள் தொடுத்தான் சஞ்சீவ்!
கனிவுடன் ஒலித்த அவனின் குரலினால் இந்துவிற்கு மீண்டும் கண்கள் கலங்கியது.
"சஞ்சீவ், ப்ளீஸ் கொஞ்சம் சீக்கிரம் வரீங்களா? வீடு பக்கத்தில வந்துட்டு எனக்கு மிஸ்டு கால் கொடுங்க... நான் வெளியே வரேன்..."
"சரி இந்து, நான் உடனே வரேன்..." என சொல்லிக் கொண்டே எழுந்துக் கொண்டான் சஞ்சீவ்!
🌼🌸❀✿🌷