”எனக்கு பார்த்து வைச்ச மாப்பிள்ளை இங்க தங்கலை”
”அப்படியா”
”எதுக்கு இப்படி என்னை கஷ்டப்படுத்திப் பார்க்கற கொம்பா”
”ம்ம் உனக்கு நரகத்தை காட்டறேன்”
என சொல்ல அவளுக்கு தூக்கிவாரிப்போட்டது அவனோ சிரிப்புடன் அவ்விடம் விட்டு சென்றான். காவேரிக்கு கோபம் தலைக்கேறியது
”ஓஹோ எனக்கு நரகத்தை காட்ட வந்தியா, அப்பகூட உன் மனசு என்னை ஏத்துக்கலைல்ல இருக்கட்டும் கொம்பா, இந்த காவேரியும் எதுக்கும் சளைச்சவள் இல்லை” என நினைத்துக் கொண்டாள்.
அடுத்து அடுத்து வந்த நாட்கள் இவ்விருவருக்கும் கொடுமையாக இருந்தது, இரு வீட்டிலும் கல்யாண ஏற்பாடுகள் மின்னல் வேகத்தில் நடைபெற்றது காவேரிக்கு புது உடை புது தாலி என வாங்கி வைத்தார் சண்முகம் அதைக்கண்டு துக்கப்பட்டாள் காவேரி. அதே போல கொம்பனுக்கும் புது துணி புது நகைகள் என வாங்கி வைக்கவும் அரண்டான். ஆனாலும் ஏதும் பேசாமல் அமைதி காத்தான்.
வெள்ளிக்கிழமை வந்தது.
இருவீட்டினரும் திருமணத்திற்கு செல்ல தயாரானார்கள், கொம்பனும் சரி காவேரியும் சரி மனம் முழுக்க துக்கத்துடன் நொந்தபடியே இருந்தார்கள், இம்முறை அவர்கள் தங்களின் பெற்றோரின் விருப்பத்திற்காக திருமணம் செய்துக் கொள்ளலாம் என நினைத்தார்கள், ஆனால் மனதில் ஒருவரை ஒருவர் விரும்பிக் கொண்டுதான் இருந்தார்கள், ஊர்வலம் போல அணிவகுத்து வந்தனர் இரு பிரிவினரும் ஒரு இடத்தில் சங்கமித்துக் கொண்ட போது அனைவருமே கலந்துவிட்டார்கள், அதில் கொம்பன் அவன் பக்கத்தில் அவனுக்கு