மனைவியாக வாழ்ந்தது போல ஒற்றுமையாக இருந்தார்கள், இவ்விருவரின் அன்னியோன்யத்தைக்கண்ட அனைவரும் நிம்மதியானார்கள்.
இரவு முதலிரவுக்காக கொம்பனின் அறை தயாரானது. நல்ல நேரம் பார்த்து கொம்பனும் காவேரியும் அந்த அறைக்குள் அனுப்பப்பட அவர்களும் அங்கிருந்த படுக்கையில் அமர்ந்தார்கள் ஏதும் பேசாமல் கெக்கபெக்கவென சிரித்துக் கொண்டார்கள் பின்
”அப்புறம் மாமா” என அவள் மெதுவாக பேச்சைத் தொடங்க
“மாமாவா”
”ஆமாம் நீ எனக்கு முறைப்பையன்தானே அப்போ நான் உன்னை மாமான்னுதானே கூப்பிடனும்”
“கூப்பிடு கூப்பிடு நீ கூப்பிடாம வேற யார் கூப்பிடுவா”
”இந்நேரம் உங்க நண்பர் இருந்திருந்தா சந்தோஷப்பட்டிருப்பார்ல மாமா”
”கண்டிப்பா”
”அவரை போய் பார்க்கனும் மாமா”
”பார்க்கலாம் எதுக்கும் ஈசன் அருள் வேணும், நான் சந்நியாசியாகலாம்னு பார்த்தா அவன் சந்நியாசியாகி நான் போக நினைச்ச காசியில போய் செட்டில் ஆயிட்டான், இந்நேரம் சிவதொண்டாற்றிக்கிட்டு இருப்பான், அவனை நினைச்சா உண்மையிலயே எனக்கு பெருமையா இருக்கு”
”எனக்கும்தான் இப்பேர்ப்பட்ட அண்ணன் எனக்கு கிடைச்சது நினைச்சு எனக்கும் பெருமையா இருக்கு மாமா”
”சரி போகட்டும் இப்ப என்னை பழிவாங்கப் போறியா இல்லை என்கூட சந்தோஷமா