”நான் சாகறவரைக்கும்”
”அப்பா”
”என்னடா நான் சீக்கிரமா சாகனும்னு ஆசைப்பட்டா நீயே அவளை கூட்டிட்டுப் போய் அவள் வீட்ல விட்டுடு”
”என்னப்பா நீங்க என் உசுரை இப்படி வாங்கறீங்களே, நானே என் வாழ்க்கை பாழாயிடுச்சேங்கற கவலையில இருக்கேன், இதுக்கு காரணமா இருந்தது யாரு, அந்த மஹதிதானே, அவளை எப்படி நான் மன்னிச்சி ஏத்துக்கறது”
”இதப்பாருடா நான்தான் அப்பவே சொன்னேனே, நீ அவளை ஏத்துக்க ஏத்துக்காம போ, யாரும் உன்னை கட்டாயப்படுத்த மாட்டாங்க, நான் கிளம்பறேன், உன்னை தேடி அலைஞ்சே என் நேரம்லாம் வெட்டியா செலவாயிடுச்சி, இனியாவது நான் உருப்படியா என் வேலையை முடிக்கறேன், போ வீடு போய் சேரு உனக்காக உன் அம்மாவும் சின்ன மருமகளும் காத்திருக்காங்க” என சொல்ல
”அவள் இருக்கற இடத்துக்கு நான் இருக்க மாட்டேன்”
“பரவாயில்லை நம்ம வீட்டு திண்ணையில இருந்துக்க போ போ“ என சொல்லிவிட்டு அவர் சென்றுவிட கடுப்பான வேங்கையனோ விதியே என நொந்தபடியே தன் வீடு நோக்கிச் சென்றான்
மறுபக்கம் மூர்த்தி வேலைக்குச் செல்வது போல் ரெடியாகி செல்ல ஜானகி தடுத்தாள்
”மாமா”
”இதப்பாரு எனக்கு பேங்க்ல முக்கியமான மீட்டிங் இருக்கு அதுக்கு நான் தயாராகனும் நீ என் உயிரை எடுக்காத”