”அதை ஏன் நீ கேட்கற”
”இல்லை நானும் அவங்ககிட்ட பேசப் போறேன் அதுக்குதான்”
”தாராளமா பேசு நான் உன்னை பேச வேணாம்னு சொல்லலையே”
”நான் முதல்ல பேசிடறேனே”
”ஏன்”
”இல்லை நான் முதல்ல பேசிட்டா அவங்களுக்கு ஒரு தௌவு கிடைக்கும்”
”யாரு நீ பேசி அவங்க தெளியப்போறாங்களா சரி ஆகட்டும், நீயே பேசு நான் கடைசியில பேசிக்கிறேன்” என சொல்ல மூர்த்திக்கு பரமானந்தமாக இருந்தது.
புன்னகையுடன் அந்த பயணத்தை ரசித்தான். புது ஊர் என்பதால் இருவருமே அக்கம் பக்கம் வேடிக்கைப் பார்த்தபடியே பயணித்தார்கள்.
முக்கால் மணி நேர பயணத்தில் மஹதியின் வீடு வந்தது, ஆட்டோவை விட்டு இருவரும் இறங்கினார்கள், வீரசிங்கம் பேசினபடியே 100 ரூபாய் தர மூர்த்தியும் தன் பங்கு 100 ரூபாய் பணத்தை தந்துவிட்டு பார்த்தான், வீரசிங்கம் வீட்டிற்குள் நுழைவதைக்கண்டு தடுத்தான்
”இருங்க இருங்க நான் முதல்ல போறேன்”
”வயசுல பெரியவன் நானு நான்தான் முதல்ல போவேன் நீ சொன்ன மாதிரி நீயே முதல்ல பேசு”
”சரி சரி போங்க” என சொல்ல வீரசிங்கமும் வீட்டிற்குள் நுழைந்து