நின்றார்கள். அதில் மாதவி கலங்கிப் போனாள் கோவலனோ உதயமூர்த்தியைக் கண்டதும் வெறுப்புற்றான்.
”இங்க ஏன் வந்தீங்க போங்க வெளிய” என அவரையே விரட்ட அவரோ
”ஏன்பா என்னை விரட்டற ஓ நீ சந்தோஷமா இருக்கறதை கெடுத்துட்டேன்னு கோபமா” என சொல்ல மாதவியோ
”சார் ப்ளீஸ் தப்பா நினைக்காதீங்க”
”அதான் தப்பு நடந்துடுச்சே என் கண்முன்னாடியே எல்லா கர்மத்தையும் பார்த்துட்டேன் இனி என்ன இருக்கு, ஓ கவலைப்படாதம்மா உன்மேல நான் கோபப்படமாட்டேன்” என சொல்லியவர் கோவலனிடம்
”கிளம்பு வா போலாம்“
”எங்க”
”உன் தாத்தாகிட்ட“
”நான் வரலை எனக்கு அவரை பார்க்கவே பிடிக்கலை”
”கோவலா புரிஞ்சிக்க, நீ காணாம போனதால அவனுக்கு உடம்பு சரியில்லாம இப்ப ஆஸ்பிட்டல்ல இருக்காப்ல, உன்னை பார்த்தா அவரோட உடம்பு குணமாகும் என்கூட வா”
என சொல்ல தாத்தா என்றதும் அவன் சற்று மனம் இரங்கினான் மாதவி கூட அதிர்ந்தாள்
”கண்ணகி எங்க இருக்கா அவள் எப்படியிருக்கா” என உதயமூர்த்தியிடம் கேட்க அதற்கு அவரோ
”நீ ஏன்மா அவளை நினைச்சி கவலைப்படற பாவம் அவள் உயிர்தோழியே தனக்கு துரோகம்