”மாதவியா அவள் இன்னுமா இங்க இருக்கா”
”அவரே அவளை இருக்க வைக்கறாரு”
”அவள் ஒரு துரோகி”
”இல்லை சார், மாதவி மேல தப்பில்லை, தப்பெல்லாம் கோவலன் மேல, மாதவியை அவர் காதலிச்சிருக்கலாம் தன் காதலை அவர் அவள்கிட்ட சொல்லியிருக்கலாம், ஆனால் மாதவி அவளோட காதலை அவர்கிட்ட சொல்லலை, அதுக்குள்ள அவருக்கு கல்யாணம் ஆனதும் அவள் விலகிப் போயிட்டா, விலகினவளை விடாம விரட்டிபிடிச்சி தன்கூட வைச்சி அவளை கஷ்டப்படுத்தறாரு சார்”
“என்னமா இது சிலப்பதிகாரம் காவியம் பார்த்த மாதிரியிருக்கு”
”இருக்கலாம் சார், ஆனா அந்த கதை வேற இந்த கதை வேற, இந்த கதையில மாதவி மேல தப்பில்லை, அவள் கோவலனை அடைய ஆசைப்படலை, கோவலன் என்னை ஏற்க பிடிக்காம மாதவியை தேடி போறாரு”
”இந்த பிரச்சனையை எப்படிம்மா சரியாக்குவ”
”சிலப்பதிகாரம் காவியத்தில வர்ற கண்ணகியில்ல நான், இந்த நூற்றாண்டோட எதார்த்த கண்ணகி, அதனால நான் ஒரு முடிவு எடுத்துட்டேன்”
”என்ன முடிவு“
”இந்த உயிலை பாருங்க”
”உயிலா”
”ஆமாம் தாத்தா ஆஸ்பிட்டல்ல இருந்தப்பவே உசுரு போறதுக்கு முன்னாடியே இந்த உயிலை