தங்க நிறத்தில் மின்னிய அவளின் நிறத்தை எடுத்து காட்டுவது போல் அவள் அணிந்திருந்த கரும்பச்சை சுடிதார் அவளின் அழகுக்கு அழகூட்டியது...
வில்லாக வளைந்திருந்த புருவமும், பட்டாம்பூச்சியாக சிறகடித்த கண்ணிமைகளும் அவனை வசியம் செய்தன...
செக்க சிவப்பாக இருந்த அவளின் உதடுகளில் இருந்த சின்ன புன்னகையும், கன்னத்தில் இருந்த மெல்லிய சிவப்பு வண்ணமும் அவனை என்னவோ செய்தது...
அவளையே வெறித்து பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பது புரிந்த போதும், அவனால், அவளை விட்டு கண்களை நகர்த்த முடியவில்லை...
ஏதோ மந்திரத்தில் கட்டுண்டவன் போல் ஆர்த்தியை பார்த்தப்படியே அமர்ந்திருந்தான் விக்ராந்த்...!
🌼🌸❀✿🌷
“அப்புறம்...?”
“அதை ஏன் கேட்குற ஜானு, அன்பே அன்பே கொல்லாதேன்னு பாட்டு பாடாத குறை தான்... வாய்க்குள்ள ஈ போறது கூட தெரியாம ஆன்னு பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்க்குறது மாதிரி பார்த்துட்டு இருந்தான்...”
சரவணன் சொன்னதை நம்ப முடியாமல் இமைகளை உயர்த்தினாள் ஜான்வி!
“நம்ம விக்கியா? என்ன விக்கி அப்படியா செஞ்ச?”
விக்கிராந்த் அமைதியாக இருக்க, சரவணன் தொடர்ந்தான்...
“அவனை ஏன் கேட்குற, என்னை கேளு ஜானு... அப்புறம் அந்த ஆர்த்தியோட அப்பா விக்கி