(Reading time: 7 - 14 minutes)
Unathu kangalil enathu kanavinai kaana pogiren
Unathu kangalil enathu kanavinai kaana pogiren

முதுகுல தட்டி கூப்பிட்டப் பிறகு தான் ஐயா பூலோகத்துக்ற்கே வந்து சேர்ந்தார்... இவன் செய்த வேலை இருக்கே, அதெல்லாம் எக்ஸ்ப்ளைன் செய்ய முடியாது...”

  

“சூப்பர்!!! அப்போ விக்கி நீயும் உன் ஜோடியை கண்டுபிடிச்சாச்சுன்னு சொல்லு! அவங்க கிட்ட ஓகே சொல்லிட்டீயா?”

  

இப்போதும் சரவணனே பதில் சொன்னான்...

  

“அவன் எங்கே இருந்து ஓகே சொல்றது!! ஆர்த்தியோட அப்பா இவனையும் அந்த ஆர்த்தியையும் ஒன்னு ரெண்டு வாரம் பேசி பார்த்து அப்புறமா முடிவு எடுக்க சொல்லி இருக்கார்...”

  

“ஓஹோ, பழகி பார்த்து டெசிஷன் எடுக்க போறீங்களா! சூப்பர்டா விக்கி! ஆமாம் நீ ஏன் எதுவுமே சொல்லாம அமைதியா இருக்க?”

  

“இப்படி விபரம் புரியாமல் நம்ம வருங்கால மாமனார் இரண்டு வாரம் தவிக்க விடுராறேன்னு தான்... விட்டா நம்ம ஹீரோ அப்போவே தாலி கட்டி கல்யாணத்தையே முடிச்சிருப்பார்...”

  

சரவணன் நண்பனை கிண்டல் செய்து சிரித்தான்!

   

“சும்மா இரு சரோ! அமைதியா எல்லாம் இல்லை ஜானு! நானா அப்போ அப்படி ரியாக்ட் செய்தேன்னு யோசிச்சு பார்த்து எனக்கே இப்போ ஒரு மாதிரி இருக்குப்பா,” என்றான் விக்கிராந்த்.

  

“அதெல்லாம் அப்படி தான் விக்கி... உனக்கே உனக்கா நீ செலக்ட் செய்யும் அந்த ஒரே ஒருத்தி கிட்ட அப்படி ரியாக்ட் செய்றதுலாம் தப்பே இல்லை... அப்புறம் உன் அம்மா அப்பா கிட்ட சொல்லிட்டீயா? ஆன்ட்டி என்ன சொன்னாங்க?”

  

“இன்னும் சொல்லலை ஜானு... சொல்லனும்,” என்றான் விக்கிரநாத் தயக்கத்துடன்!

  

“பார்த்தீயா ஜானு, சார் அதுக்குள்ளே எவ்வளவு முன்னேறிட்டார்னு? இதுவரைக்கும், எப்போவும்

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.