சுருண்டு தரையில் விழுந்தவள், கண்களில் வலியின் காரணமாக வந்த கண்ணீருடன்
”என்னையே அடிச்சிட்டீங்களா”
”ஆமாம்டி உன்னை இப்ப அடிச்சிருக்க கூடாது, முன்னாடியே உன்னை அடிச்சிருக்கனும், தப்பு என்னோடது உனக்கு முழு சுதந்திரம் கொடுத்ததுக்கு நீ என் அப்பா அம்மாவையே வெளியே போன்னு சொல்வியா”
”நான் ஒண்ணும் போக சொல்லலை, அவங்களா தப்பா புரிஞ்சிக்கிட்டு போனா அதுக்கு நான் எப்படி பொறுப்பாவேன்”
”செய்றதை செய்துட்டு பேச்சைப் பாரு பேச்சை“
”இப்ப எதுக்கு என்னை திட்டறீங்க, நடந்த அனைத்துக்கும் காரணம் அந்த மஹதிதான், அவள் இங்க தங்கின கொஞ்ச நாட்கள்லயே உங்க அப்பா அம்மா மனசை மாத்திட்டா, அதான் அவங்க அவளுக்காக என்னை வெறுக்கறாங்க”
”அதான் இல்லை உன்னோட நடவடிக்கையால உன்னை வெறுக்கறாங்க“
”இதப்பாருங்க மாமா, நான் செஞ்சது தப்புதான் அதை நான் நியாயப்படுத்த வரலை நானும்தானே ஏமாந்துப் போனேன், எனக்கு எவ்ளோ வலியும் வேதனையும் இருக்கும், அதை புரிஞ்சிக்காம ஏதோ உங்க வாழ்க்கையை அழிக்க வந்தவ நான்ங்கற மாதிரி அவங்க பேசறாங்க”
”ஆமாம் நீ என் வாழ்க்கையை அழிச்சிட்ட இனி என்ன இருக்கு சொல்லு”
”மாமா”
”உன்னால என் பேரு என் வீட்டு கௌரவம், எங்க மானம் மரியாதை எல்லாம் போச்சி இருந்தாலும் உனக்காக நான் பொறுத்துக்கிட்டான், அதுக்காக என் அப்பா அம்மாவை என்னால