”நான்தான் அப்பவே சொன்னேனே என் மகனை பத்தி, நீதான் நம்பலை இப்ப பாரு, அவனாலயே உன் கழுத்தில தாலி கட்ட முடியலை இனிமேலயாவது உண்மையை நம்பு“
”ஏன் அத்தை இப்படி பேசறீங்க எத்தனை முறை என்கிட்ட கெஞ்சியிருப்பீங்க உங்க மகனோட வாழச் சொல்லி இப்ப வாழ வந்தா வேணாம்னு சொன்னா எப்படி நீங்க சொன்னா உங்க புள்ளை கேட்பாரு, அவர்கிட்ட சொல்லுங்க என் கழுத்தில தாலி கட்டச் சொல்லுங்க” என சொல்ல அதற்கு மங்களமோ
”நீ வந்தது எனக்குப் பிடிக்கலை என் வாயால நீ சொன்னதை செய்ய விடமாட்டேன்”
”உங்களுக்கு என்னை பிடிக்கலைன்னா போங்க” என வெறுப்பாகச் சொல்ல உடனே மங்களமோ
”ஓ என்னையே போக சொல்றியா சரிடியம்மா நீயே இங்க இருந்துக்க, நானே கிளம்பறேன்” என சொல்லியவர் அப்போதே கிளம்ப முயல தடுத்தார் வீரசிங்கம்
”என்னங்க என்னை விடுங்க நான் போறேன், எனக்கு இந்த வீட்ல எந்த உரிமையும் இல்லை யாருக்காக இனி நான் இங்க இருக்கனும்”
”எனக்காக இரு இல்லையா என்னையும் கூட்டிக்கிட்டு போ, என்னை மட்டும் தனியா விட்டுட்டுப் போனா எப்படி மங்களம்” என சொல்ல மங்களமோ சின்ன பெருமூச்சுவிட்டு
”வாங்க போவோம், நம்ம புள்ளை வாழ்க்கையில நாமளே தடங்கலா இருக்க வேணாம், அவன் வாழட்டும் நாம இங்கிருந்தா வீணா பிரச்சனைதான் வரும் வாங்க” என அழைக்க அவரும் தயங்காமல் சரியென தலையாட்டிவிட்டு கிளம்ப வேங்கையன் துடித்துப்போனான்
”அப்பா அம்மா எங்க கிளம்பறீங்க, வேணாம் இங்கயே இருங்க”
என சொல்ல சொல்ல அவர்கள் கேளாமல் செல்ல முயல வேங்கையனுக்கு வந்ததே கோபம் சட்டென ஜானகியின் கன்னத்தில் விட்டான் ஒரு அறை, அதை தாங்கிக் கொள்ள இயலாமல்