”என்ன நடக்குது இங்க”
”கண்ணு தெரியலை காலேஜ் நடக்குது”
”என்ன மரியாதை தேயுது நான் யார்ன்னு தெரியும்ல உன் சீட்டை கிழிச்சிடுவேன்”
”ஏற்கனவே உன் சீட் கிழிஞ்சிடுச்சி அது உனக்குத் தெரியாதா” என கேட்க அவனோ அதிர்ந்தான்
”என்ன உளர்ற”
”இந்த கல்லூரிக்கு சரியான பிரின்சிபாலும் துணிச்சலான தாளாளரும் வந்து இறங்கிட்டாங்க”
”யாரையா சொல்ற”
”போய் நீயே பாரு எனக்கென்ன வேற வேலையில்லை, நீ கேட்கறதுக்கு பதில் சொல்ல முடியாது போ போ” என இளப்பமாக விரட்டிவிட்டு அவன் தனக்கான வேலையை செய்யச் சென்றான்.
சிலம்புவுக்கு குழப்பம் எழுந்தது யாரது என தெரிந்துக் கொள்ள நேராக தாளாளர் அறைக்குச் சென்றான் அங்கு கண்ணகி அமர்ந்திருக்கவே அவளைக்கண்டு அதிர்ந்தான்
”ஏய் நீ எப்படி இங்க உட்கார்ந்திருக்க“
”இப்ப நான் இந்த கல்லூரியோட தாளாளர் என் இடத்தில நான் இருக்கேன் உனக்கென்ன வந்தது” என தைரியமாக பேச அவனோ வியந்தான்
”என்ன என் மேல இருந்த பயம் விட்டுப் போச்சா உனக்கு, கல்லூரியே வேணாம்னு ஓடின இப்ப எந்த முகத்தை வைச்சிக்கிட்டு திரும்பி வந்திருக்க”