வாராருங் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.
விளக்கம்
தகாத இடங்களுக்குப் போகக் கூடாது. ஒருவர் செய்த உதவியை மறக்கக் கூடாது. எல்லாரையும் பற்றி கோள் சொல்லிக் கொண்டு திரியக் கூடாது. நமக்கு வேண்டியவர்களை அலக்ஷ்யமாய்ப் பேசக்கூடாது. பெருமை தரும் கார்யங்களைத் தவிர்க்கக் கூடாது. கெட்ட செயல்களுக்குத் துணை போகக் கூடாது. நெஞ்சே! பெருமை பெற்ற குறவள்ளி மணவாளன், மயில் வாகனன், முருகப் பெருமானை போற்றுவாய்.
”இந்த விளக்கத்தை யாரும் மறக்க கூடாது இதுபடி நடக்கனும் சரியா” என கேட்க மாணவர்கள் ஒட்டுமொத்தமாக சரி என்றார்கள்.
”அப்புறம் இன்னொரு முக்கியமான விசயம், இன்னும் 2 மாசத்துல செமஸ்டர் எக்ஸாம் வரப்போகுது” என சொல்ல மாணவர்கள் சலித்துக் கொண்டார்கள், கோவலன் கூட நொந்துப் போனான்
”பிரின்சிபாலா சேர்ந்த முதல் நாளே எவ்ளோ பெரிய கஷ்டத்தை தர்றா பாரு” என நினைத்தபடியே அவளை முறைக்க அவளோ
”எனனாச்சி”
”ஒண்ணுமில்லை செமஸ்டர் எக்ஸாம் வந்தாதான் உனக்கு வீரம் வருமா என்ன“
”இதுவரைக்கும் எனக்கு துணையா யாருமில்லை, இப்பதான் நீங்க இருக்கீங்களே”
”உனக்கு யாருடைய துணையும் தேவையில்லை ஏன்னா நீ கண்ணகி உன்னை மிஞ்சினவங்க இங்க யாருமில்லை“