“இருக்காங்க”
“யாரு”
”மாதவி“
”என்ன உளர்ற”
”ஆமாம் உங்க மனசுல என்னால இடம் பிடிக்க முடியலையே, அப்போ மாதவிதானே என்னை விட பெரிசு”
”அப்படியெல்லாம் இல்லை என்னிக்குமே நீதான் பெரிசு, கல்யாண வாழ்க்கையையும் கல்லூரி வாழ்க்கையையும் சேர்த்து வைச்சி குழம்பிடாத, அது வேற இது வேற சரியா”
”ம்”
”சரி போ போய் வேலையைப்பாரு, 2 மாசத்துல செமஸ்டர் எக்ஸாம் வருது, போனமுறை நீ என்னென்ன செய்தேன்னு எனக்கு நல்லாவே தெரியும், அதையே இப்பவும் நான் செய்றேன் வேற வழி” என புலம்ப கண்ணகியோ சிரித்தபடியே அவ்விடம் விட்டு செல்ல அவள் முன்பு செய்தது போல செய்ய நினைத்து உடனே மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அதை செய்ய வேண்டும் இதை செய்ய வேண்டும் என பலவித திட்டங்களை சொல்லி முடித்து அவர்களை அனுப்பிவிட்டு ஓய்ந்துப்போய் கண்ணகியிடம் வந்து சேர்ந்தான், அவளோ அவனின் சோர்வைக்கண்டு
”ரொம்ப சோர்வா இருக்கீங்க பரவாயில்லை இனி கல்லூரியை நான் பார்த்துக்கிறேன் நீங்க உங்க கம்பெனியை போய் பாருங்க”
”இருக்கட்டும் பரவாயில்லை, கம்பெனியை பார்த்துக்கறதை விட கல்லூரியை பார்த்துக்கறது ரொம்ப கஷ்டம் கண்ணகி”