”என்னை என்ன செய்யச் சொல்றீங்கப்பா“
”ஒண்ணும் இல்லைம்மா இனி நீ ஃப்ரீ, நீயே எல்லா முடிவும் எடு, வேங்கையன் வேணும்னு நினைக்கறியா கவலைப்படாத, பயப்படாத கிளம்பி போ உனக்காக அவங்க வீட்டு வாசலை திறந்து வைச்சிருப்பாங்க, உனக்காக அவங்க காத்திருப்பாங்கம்மா”
”நான் போகலைப்பா”
”சரிம்மா இப்பன்னு இல்லை எப்ப உனக்கு தோணுதோ அப்ப போ இப்ப போய் ஓய்வெடு” என சொல்ல அவளோ குழப்பத்துடன் தன் அறைக்குச் சென்று படுத்துவிட்டாள். அவளின் மனதும் குழம்பியிருந்தது.
ஒரு வாரம் கழித்து…
”மஹதி ரெடியா”
”ரெடிப்பா” என மஹதியும் ரெடியாகி வந்தாள்
சாந்தியும் காரில் ஏறி அமர்ந்துக் கொள்ள மஹதியும் ஏறிக் கொண்டாள், மகேந்திரனும் காருக்குள் ஏறியதும் டிரைவர் வண்டியை எடுத்தான் காரைக்குடி நோக்கி
”மறுநாள் ஜானுவுக்கு கல்யாணம் இப்பவே லேட்டாயிடுச்சி, ரிசப்ஷன் கூட இல்லையாம்” என்றாள் மஹதி
”ஆமாம் நீ லேட் பண்ணிட்ட அவளுக்காக கிப்ட் வாங்க கடைக்குப் போன வர்றதுக்கு இவ்ளோ நேரமா எடுத்துக்குவ”
”சாரிப்பா என்ன வாங்கறதுன்னு தெரியாம குழம்பிட்டேன், எது எப்படியோ ஒரு நல்ல கிப்ட் வாங்கிட்டேன்பா” என சொல்ல சாந்தியோ