தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்
51. மனம் விரும்புதே உன்னை... உன்னை...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
அன்றைய நாள் முழுவதும் அம்மாவின் பக்கத்திலேயே இருந்தாள் இந்து. ஆனால் அவளின் மனம் முழுதாக அங்கே இல்லை. அர்ச்சனாவிற்கு நெஞ்சு வலி என்று தெரிந்து பதறிய உடனே, சஞ்சீவிற்கு தான் அவள் முதலில் ஃபோன் செய்தாள். சஞ்சீவ் அவளின் அழைப்பை ஏற்காததே அவளுக்கு பெரிய அதிர்ச்சியாக தான் இருந்தது. அதற்கு முன் வரை அவள் ஃபோன் செய்யவில்லை என்றாலும், சஞ்சீவ் மெசேஜ் அனுப்ப தவறியதே இல்லை. காஃபி ஷாப் மீட்டிங்கிற்கு பிறகு அவனிடம் அவள் பேசவும் இல்லை, அவன் பக்கம் இருந்து மெசேஜும் வரவில்லை. அதில் இந்துவிற்கு பெரிய அளவில் ஆச்சர்யமும் இல்லை! ஆனால் அவள் ஃபோன் செய்தப் போது சஞ்சீவ் அந்த அழைப்பை ஏற்காதது, இந்துவிற்கு மிகவும் வருத்தமாக இருந்தது. என்ன தான் காஞ்சனாவிற்காக என்று சொல்லி மனதை சமாதானப் படுத்த முயன்றாலும், அவளால் அதை ஏற்க முடியவில்லை! கீதா சொன்னது போல் அவளின் ஃபோன் அழைப்பை ஏற்காததற்கு சஞ்சீவ் எந்த காரணமும் கூட சொல்லவில்லை. அவளாக சென்று பேசிய போதும் கூட அவன் சரியாக பேசாதது அவளுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அவள் எடுத்த முடிவிற்கு ஏற்ப தான் சஞ்சீவ் நடக்கிறான் என்பது அவளுக்கும் புரிந்தது... ஆனால், அதை ஏற்றுக் கொள்ள தான் அவளின் மனதால் முடியவில்லை!
மருந்தின் தன்மையால் அர்ச்சனா பாதி நேரம் தூங்கி கொண்டிருக்க, இந்து ஒரு பக்கம் மனதினுள் குழம்பிக் கொண்டு அமைதியாக இருக்க, வீணாவிற்கு தான் போரடித்தது! ஆனால், இந்துவின் மனநிலையை ஓரளவிற்கு வீணாவால் புரிந்துக் கொள்ள முடிந்தது. அதனால் அவள் இந்துவை தொல்லை செய்யவில்லை. மாறாக, ஒருவிதத்தில் இதுவும் இந்துவிற்கு நல்லது தான் என்று நினைத்தாள். இந்து சஞ்சீவிடம் மனம் விட்டு பேசுவது தான் இப்போதிருக்கும் பிரச்சனைக்கு ஒரே வழி என்பது வீணாவின் நம்பிக்கை. ஆனால் இந்துவை மனம் விட்டு சஞ்சீவிடம் பேச செய்வது எப்படி என்று தான் அவளுக்கு புரியவில்லை. எனவே, அந்த விதத்தில், இந்து இப்படி சஞ்சீவின் பாராமுகத்தால் குழம்புவதும் கூட நல்லது தான் என்று அவளுக்கு தோன்றியது!
இப்படி இந்து ஒரு பக்கம், வீணா ஒரு பக்கம் வெவ்வேறு சிந்தனையில் ஆழ்ந்திருந்தப் போது, அவர்களை தவிர வேறு பலரும் கூட குழப்பத்தில் தான் இருந்தார்கள்!
சஞ்சீவ் இந்துவிடம் சரியாக பேசாமல் வந்ததை நினைத்து மனதில் புகைந்துக் கொண்டிருந்தான். கீதா தேவைப்பட்டப் போது இந்துவிற்கு உதவாமல் போனதை நினைத்து