Page 13 of 15
”இல்லை நான் போறேன்“
”எங்கப் போற” என கேட்க அவளிடம் பதில் இல்லை தடுமாற ஜானகி புரிந்துக் கொண்டு
”சரி சரி போ அப்படியே என் கல்யாணத்துக்கு வராததால நான் கோபமா இருக்கேன்னு சொல்லிடு“
”யார்கிட்ட சொல்ல சொல்ற”
”நீ யார்கிட்ட போறியோ அவங்ககிட்ட”
”நான் எங்கயும் போகலை“
”சரிடி நீ போறப்ப சொல்லிடு”
”நான்தான் போகலைன்னு சொல்றேன்ல” என கத்திவிட்டு அவள் செல்ல ஜானகியும் மூர்த்தியும் கலகலவென சிரித்தார்கள்.
மஹதியோ தன் தாய் தந்தையரை தேட அவர்கள் அங்கு இல்லை.
”எங்க போனாங்க இவங்க” என நினைத்தபடியே தேடி அலைந்து திரிய குபேரன் வந்தார்
”யாரைம்மா தேடற“
”என் அப்பா அம்மாவை தேடறேன் எங்க அவங்க”
”பக்கத்தில வேங்கையன் வீட்டுக்கு போயிருக்காங்க”
”ஏன் அங்க போகனும் ஏன் போகனும் என்ன விசயம்” என படபடவென கேட்க