”ப்ளீஸ் சார் சொல்லுங்க”
”எதுக்குன்னு சொல்லும்மா”
”ஒண்ணுமில்லை சார், மார்ச்சுவரியில இருக்கற பாடி முகம் சிதைந்து போன நிலைமையில இருக்கு, அதுதான் சிலம்புன்னு என்னால நம்ப முடியலை, இதே அவங்க பெற்றோர்கள் இருந்தா நல்லாயிருக்கும்”
”அவங்க இருந்தா மட்டும் என்ன செய்ய முடியும், சிதைஞ்ச முகத்தை பார்த்து அவங்களால அடையாளம் காட்டவா முடியும்”
”அவங்களால முடியாதுதான் ஆனா டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கலாமே”
“டிஎன்ஏ டெஸ்டா?”
”ஆமாம் சார், அப்படி டெஸ்ட் எடுத்துப் பார்த்தா அது சிலம்புவோட உடம்பு இல்லைன்னு கண்டுபிடிச்சிடலாம், அப்ப செத்தது யாரோ சிலம்பு இன்னும் உயிரோட இருக்கான்னுதானே அர்த்தம், அதுக்குதான் கேட்கறேன் சார், உதவி செய்ங்க” என சொல்ல மறுபக்கம் அப்படியொரு அமைதி
”ஹலோ சார் சார் இருக்கீங்களா ஹலோ” என கத்த அவரோ
”ஆஆஆ சரிம்மா இந்த டெஸ்ட் விசயத்தை நான் பார்த்துக்கிறேன், நீ வேற ஏதாவது ஆதாரம் கிடைக்குதான்னு பாரும்மா”
”சார் டெஸ்ட் ரிசல்ட் வரட்டுமே”
”அது வரும் போது வரட்டும், உனக்கென்ன சிலம்பு உசுரோட இருக்கான்னு நம்பறல்ல அவனை பிடிச்சி கொண்டா அதுக்குள்ள நானும் ரிசல்ட் எடுத்து வைக்கிறேன், ஆளாளுக்கு வேலைகளை பிரிச்சி செய்தாதான் 3 நாள்ல கோவலனை காப்பாத்த ஆதாரங்களை திரட்ட