விளக்கம் கொடுத்து விட்டு ப்ரியம்வதாவின் கைகளை கூச்சத்துடன் விலக்கினான் வினாயக்.
ப்ரியம்வதாவே அவனை விட்டு தள்ளி நின்றாள். அவள் முகத்தில் அதிர்ச்சி இருந்தது.
“என்னது டின்னரா? அது நடந்து இரண்டு நாள் ஆச்சு வினாயக்! இரண்டு நாளா உன்னை காணோம்னு நான் எங்கே எல்லாமோ தேடினேன். உன் ஃபோனுக்கு ஆயிரம் தடவை கால் செய்தேன். அன் ரீச்சபிளாவே இருந்துச்சு!” ப்ரியம்வதா இப்போதும் படபடப்புடன் பேசினாள்!
என்னது இரண்டு நாட்கள் ஆகி விட்டதா??? வினாயக்கிற்கு குழப்பமாக இருந்தது!
தலையை பிடித்துக் கொண்டு யோசித்தான். ப்ரியம்வதா வீட்டில் பேசியது, சாப்பிட்டது, கிளம்பியது அனைத்தும் அவனுக்கு ஞாபகம் இருந்தது. நடக்கும் போது டையர்டாக இருப்பதாக யோசித்ததும் கூட ஞாபகம் இருந்தது.
அப்புறம் என்ன நடந்தது? எப்படி இங்கே வந்தான்?
இரண்டு நாட்களாக என்ன செய்துக் கொண்டிருந்தான்??
🌼🌸❀✿🌷
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
தொடரும்