”தாராளமா செய்துக்கலாம் ஆனா அவங்களால என்னை புரிஞ்சிக்க முடியாது, 2 மனைவியை இழந்த ஒருத்தனை பரிதாபமானவன்ங்கற அடிப்படையில கல்யாணம் செய்து வேண்டா வெறுப்பா என்கூட வாழ்வாங்க, அப்படி ஒரு நரக வாழ்க்கை எனக்கு வேணாம்”
”நான் எதுக்கு”
”நீயும் என்னைப் போலவே துணையை இழந்து நரகத்தில வாழற, நீயும் நானும் சேர்ந்தா நம்ம வாழ்க்கை சொர்க்கமாயிடும்”
”வேணாம் நரகமாவே இருந்தாலும் இதுதான் எனக்கு நிம்மதியை தருது”
”இப்ப வேணா உனக்கு அப்படி தோணலாம் ஆனா, இதுவே நிரந்தரம் இல்லை ஹரிணி யோசிச்சிப்பாரு”
”என்னால யோசிக்க முடியலை, ஒரே குழப்பமா இருக்கு, பயமா இருக்கு”
”பயமா எதுக்கு உன்னை நான் கஷ்டப்படுத்துவேன்னு நினைச்சி பயப்படறியா, சே சே ஒரு நாளும் உன்னை நான் கஷ்டப்படுத்த மாட்டேன் ஏற்கனவே 2 பொண்ணுங்களால என் வாழ்க்கையே தடம் மாறிடுச்சி, அதுல இருந்து நான் நிறைய பாடத்தை கத்துக்கிட்டேன், மறுபடியும் இன்னொரு பொண்ணை மனசு அறிஞ்சி கூட என்னால காயப்படுத்த முடியாது, என்னை நம்பு ஹரிணி”
”இது நம்பிக்கை சம்பந்தப்பட்ட விசயம் இல்லை தருண், உணர்ச்சிகள் சம்பந்தப்பட்டது சட்டுன்னு என்னால இளங்கோவை தூக்கி எறிஞ்சி அந்த இடத்தில உன்னை உட்கார வைக்க முடியாது” என அவள் அறை அதிர கத்தினாள், கண் கலங்கியிருந்தாள், அதைக்கண்ட தருணோ
”நான் உடனே உன்னை இளங்கோவை மறக்க சொல்லலை, என்னாலயும் பவானியை மறக்க முடியாது ஆனா, முயற்சி செய்யலாம் எனக்கு நீ உனக்கு நான்னு வந்த பின்னாடி நம்ம வாழ்க்கை பாதை மாறும், கொஞ்ச கொஞ்சமா நம்ம மனசும் மாறும் நீயும் இளங்கோவை