சிரித்தாள்.
”ஹரிணி வா சாமி கும்பிட்டு வரலாம்” என அழைக்க அவளோ மறுத்தாள்
”சாமியை அப்புறம் கும்பிடலாம் அதுக்கு முன்னாடி நாம ஒருத்தரை கும்பிடனும், அவங்களோட ஆசிர்வாதம் கண்டிப்பா நமக்கு கிடைக்கனும் தருண்”
”ஓ அப்படியா சரி வா போலாம்” என சொல்ல அவனை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினாள் ஹரிணி
”என்ன ஹரிணி யாரோ ஒருத்தர்கிட்ட ஆசிர்வாதம் வாங்கனும்னு சொல்லிட்டு வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்க, அந்த முக்கியமான ஆள் வீட்ல இருக்காங்களா“
“ஆமாம் தருண் வாங்க ப்ளீஸ்” என அவனை அழைத்துக் கொண்டு இளங்கோவின் போட்டோவின் முன் நின்றாள். அதைக்கண்டு விக்கித்துப் போனான் தருண்
”இளங்கோ எனக்கும் தருணுக்கும் கல்யாணம் ஆயிடுச்சி, இதுல எனக்கு முழு விருப்பம் இல்லைன்னாலும் என்னோட பாதுகாப்புக்காக இந்த கல்யாணத்தை செய்துக்க வேண்டிய கட்டாயம் ஆயிடுச்சி, இது கண்டிப்பா உனக்கு பிடிக்கும்னு நம்பறேன், உனக்கு இந்த கல்யாணத்தில சந்தோஷம்னா எங்களை ஆசிர்வாதம் செய்யுங்க, உங்களோட ஆசி எனக்கு கண்டிப்பா வேணும்” என சொல்ல தருணுக்கு திக்கென்றது.
”தருண் வாங்க இளங்கோ முன்னாடி விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கலாம்” என அவள் அழைக்க ஒரு நொடி தருணின் கோபம் எல்லை மீறி அவளை ஓங்கி அறைவது போல கற்பனை செய்துக் கொண்டவனை உலுக்கினாள்
”வாங்க தருண்” என அழைக்க அவனோ நிலைகுலைந்துப் போய் தன் நினைவுகளை பின்னோக்கிச் சென்றான்.
”பவானி என் அப்பா அம்மா விருப்பத்துக்காகத்தான் இந்த கல்யாணம் நடந்ததே தவிர எனக்கு இதுல முழுவிருப்பமும் இல்லை, அதுக்காக நீ பயப்படவேணாம், உன்னை நான்