”ஓ யார்னு தெரிஞ்சும் நக்கலா பேசறியா”
”அம்மா தாயே உனக்கு இப்ப என்ன வேணும்”
”நேத்து ரிஷியை நான் க்ளீனிக்ல பார்த்தேன் அவன் கூட இருந்த பொண்ணு யார்னு தெரிஞ்சிக்கனும்”
”தெரிஞ்சிகிட்டு நீ என்ன செய்யப்போற சொல்லு”
”எனக்கு தெரிஞ்சாகனும்” என வீடு அதிரும் அளவு கத்த
”ஏய் என்ன பொண்ணுன்னு பார்க்கறேன் இங்க வந்து கத்தற கிளம்பு கிளம்பு இது ஒண்ணும் உன் வீடு கிடையாது”
என அவர்கள் இருவரின் பேச்சுக்குரல் கேட்டதும் வெளியே வந்தான் ரிஷி அவளை வீட்டில் பார்த்ததும் முகம் சுழித்தான் நேராக அவளிடம் வந்து
”இங்க என்ன பண்ற வெளிய போ”
”ரிஷி எதுக்காக என்னை அவாய்டு பண்றீங்க” என ஒரு மார்க்கமாக பேசவும் அவனுக்கு பற்றிக்கொண்டு வந்தது. அந்நேரம் பார்த்து நந்தினி கீழே இறங்கி வர அவளை பார்த்ததும் அவளிடம் கோபமாகச் சென்றாள் வெண்ணிலா
”ஏய் யார் நீ”
”நான் நந்தினி”
”அதான் தெரியுமே உனக்கு இங்க என்ன வேலை” என கேட்க அதற்கு ரிஷி பதிலளித்தான்
”முதல்ல உனக்கு இங்க என்ன வேலைன்னு சொல்லு”