முடித்து தொய்வாக தருணை பார்த்தாள்
“எனக்குள்ள மாற்றம் வர்றது அப்புறம் முதல்ல நீ மாறனும் புரியுதா”
”புரியுது”
”புரிஞ்சா சரி இல்லைன்னா எதுக்குடா இந்த கல்யாணத்தை செய்துக்கிட்டோம்ன்னு நினைக்க ஆரம்பிச்சிட்டா, நம்ம வாழ்க்கை நரகமாயிடும்“
”அய்யோ அப்படி ஏதும் ஆகாது இனி உங்களுக்கு பிடிச்ச மாதிரி நான் நடந்துக்குவேன் தருண்”
”எனக்கு பிடிச்ச மாதிரியில்லை நிவேதினி மாதிரி நடந்துக்கனும் எப்படி நடந்துக்கனும்“
“நிவேதினி போல” என சொல்ல அவன் முகம் மலர்ந்தான் ஆனால் பவானியின் மகிழ்ச்சிதான் மறைந்துவிட்டது.
“தருண் தருண்” என ஹரிணி கத்த அதில் கவனம் கலைந்தான் தருண்
”என்ன சாப்பிடாம எதையோ யோசிக்கறீங்க என்னாச்சி”
”அதுவா ஒண்ணுமில்லை”
”என்ன விசயம் சொல்லுங்க” என கேட்க அவனோ அவளை மடக்க எண்ணி
”பவானியை நினைச்சேன்”
”அப்படியா”
”ஆமாம் நானும் அவளும் இதே போல ஒரு ஓட்டல்ல உட்கார்ந்து சாப்பிட்டது நினைவுக்கு வரவும் அதுல மூழ்கிட்டேன்“