வைக்கறா” என அகத்தியன் புலம்ப கமிஷனரோ
”அகத்தியா என்னாச்சி நீ ஏன் இப்படி பேசற”
”அவள் நாச்சியாவே இல்லை, அவளுக்கு பேய் பிடிச்சிருக்கு சார்“
”அடிவாங்காத அகத்தியா நான் ஒரு முக்கியமான விசயம் பேச வந்திருக்கேன்”
”என்ன விசயம் சார்“
”கேஸ் விசயம் என்னாச்சி எவ்ளோ தூரம் போயிருக்கீங்க”
”எங்களுக்கு பேய் பிடிக்கற அளவுக்கு போயிருக்கு சார்“
”விளையாடாத அகத்தியா பீ சீரியஸ்”
”நான் சீரியஸாதான் சொல்றேன், நேத்து அந்த கார்மெண்ட்ஸ்க்கு போயிட்டு வந்ததுல இருந்து என்னாச்சின்னு தெரியலை, என் காதுல 100 பேரோட கதறல் சத்தம் கேட்குது நானாச்சும் பரவாயில்லை பாவம் நாச்சியா அவளை பேய் பிடிச்சிருக்கு” என ரகசியமாக சொல்ல கலகலவென சிரித்தார் கமிஷனர்
”என்ன சார் சிரிக்கறீங்க, நான் உண்மையைதான் சொல்றேன் நேத்து நாங்க கார்மெண்ட்ஸ்க்கு போயிருந்தோம் அங்க என்ன நடந்ததுன்னா” என அவன் நேற்றைய நிகழ்வை பயங்கரமாகச் சொல்லி முடிக்க அதைக்கேட்டு அஞ்சாமல் சிரித்தார் கமிஷனர்
”அகத்தியா எப்படியாவது இந்த கேஸை நான் திரும்பி வாங்கனும், நீ ஹனிமூன் போகனும்னு முடிவெடுத்து இப்படியெல்லாம் பயமுறுத்தற மாதிரி ஒரு கதையை சொல்ற பார்த்தியா இதான் வேணாம்ங்கறது” என சொல்ல அகத்தியனோ அய்யோ என நொந்தபடியே எழுந்து தன் அறைக்குச் சென்றான். அவன் சென்றதும் நாச்சியா வந்தாள்
”காபி” என்றாள் அந்த குரலின் வித்தியாசத்தைக் கேட்டபடியே காபியை வாங்கிக் கொண்டே