“நீங்க பேசறன்னுதானே சொன்னீங்க இப்ப எதுக்கு அட்ரஸ் கேட்கறீங்க”
“ஏன்டா நான் இங்க எவ்ளோ கஷ்டத்தில இருக்கேன் கொஞ்சம் கூட புரிஞ்சிக்க மாட்டியா”
“என்ன கஷ்டம் சொல்லுங்க முதல்ல எனக்கு தெரிஞ்சி நீங்க சந்தோஷமாதான் இருக்கீங்க”
“ஆமாம்டா அதை நீதான் பார்த்த, வீட்ல எனக்கு பொண்ணை பார்க்கறாங்க நீதானே இந்த விசயத்தை சொன்ன”
“ஆமாம்”
“இன்னிக்கு தாத்தாவும் அதையேதான் சொன்னாரு. என்னால எப்படி கல்யாணம் செஞ்சிக்க முடியும் சொல்லு”
“ஏன் அந்த பொண்ணுங்களுக்கென்ன குறைச்சல் ஆஸ்தி அந்தஸ்துன்னு ஏகத்துக்கும் இருக்கு”
”எனக்கு இந்த ஆஸ்தி அந்தஸ்து எதுவும் தேவையில்லை”
சரி வேற என்ன வேணும்”
“எனக்கு எனக்கு” என இழுக்க
“ஆ சொல்லுங்கண்ணா காது கேட்குது, லைன் கிளியரா இருக்கு சிக்னல் கூட சூப்பராயிருக்கு சொல்லுங்க என்ன வேணும் உங்களுக்கு”
என நக்கலாக கேட்கவும் சட்டென போனை கட் செய்தான் ரிஷிகேசன்.
அவனுக்கு ஆத்திரமாகவும் அதே சமயம் கோபமாகவும் இருந்தது.