“நந்தினியை கல்யாணம் பண்ணிக்க சரின்னு சொன்னான்”
“அதுக்கு நீ என்ன சொன்ன”
“நான் போய் என்ன சொல்வேன் அண்ணா டாக்டர் பையன் நல்ல சம்பளம் அழகான வீடு பார்க்கவும் அழகாயிருக்கான் வேற என்ன வேணும்”
“நந்தினிக்கு அவனை பிடிச்சிருக்கனும்ல”
”ம் அதுக்கென்ன அவள்ட்ட கேட்டா சொல்லிடப்போறா”
“ஒரு வேளை அவள் பிடிக்கலைன்னு சொன்னா”
“அப்படி சொன்னா அடுத்த மாப்பிள்ளையை பார்க்க வேண்டியதுதான்”
“அப்ப கூட நீ என்னை பார்க்கமாட்ட”
“உங்களையா” என ஆச்சர்யமாக பார்த்து கேட்டேன்.
”ஏன் நான் உனக்கு ஆம்பளையா தெரியலையா”
”ஓ தெரியறீங்களே ஆனா பணக்காரனா தெரியறீங்க உங்க வீட்ல நந்தினியால நிம்மதியா வாழ முடியுமா, உங்க பாட்டி அதான் திமிரு பிடிச்ச பாட்டிகிட்ட மாட்டி உங்கம்மா தினம் தினம் சாகறது பத்தாது இதுல யாருமில்லாத அனாதை பொண்ணை உங்களுக்கு கட்டிவைச்சி அவளை சாகடிக்கனுமான்னு தான் பார்க்கறேன்”
“ஏன் என் மேல நம்பிக்கையில்லையா”
“இல்லையே உங்களால உங்க வாழ்க்கையில தெளிவான முடிவு எடுக்கவே யோசிக்கறீங்க