(Reading time: 7 - 13 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

  

"ம்ம்ம்... எங்கே நான் சொன்னதுல ஏதாவது ஒரே ஒரு விஷயத்தை சொல்லு பார்ப்போம்???" வீணா கேள்வி கேட்கும் டீச்சராக கண்களை உருட்டிக் கொண்டு கேட்க,

  

"அது அது..." என தடுமாறினாள் இந்து!

  

"ரொம்ப யோசிக்காதே இந்து... உனக்கு இப்போ வந்திருக்க இந்த அன்யூஷுவல் வியாதிக்கு ஒரே ஒரு மருந்து தான் இருக்கு... அது கல்யாணம் தான்!"

  

இந்து நம்ப முடியாது விழிகள் விரித்து பார்க்கவும்,

  

"என்ன கண்ணை உருட்டுற??? நான் முடிவு செய்தாச்சு, உனக்கு பிடிக்குதோ இல்லையோ, ஒரு ஆளை பிடிச்சிட்டு வந்து, உன்னை அவன் தலையில் கட்டனும்.. அப்போ தான் சரி படுவ," என்றாள் வீணா!

  

வீணா சஞ்சீவ் பற்றி பேசுவாள் என்று இந்து எதிர்பார்த்திருக்க, அதற்கு மாறாக அவள் வேறு ஒருவனுடன் திருமணம் என பேசவும், இந்துவிற்கு கோபம் வந்தது.

  

"என்ன பேச்சு இதெல்லாம் வீணா... வேண்டாம்... இத்தோடு விட்டுடு..."

  

"இல்லை இந்து அப்படி விட முடியாது... ஆன்ட்டிக்கு கவலை எல்லாம் உன்னை பத்தி தான்... அத்தை கிட்ட கூட சொல்லி புலம்பி இருக்காங்க... ஸோ, இப்போ அத்தையும் மும்முரமா உனக்கு மாப்பிள்ளை தேடிட்டு இருக்காங்க... அந்த பிரசாத் உனக்கு பிடிக்கலைன்னா சொன்ன?"

  

இந்து பதில் சொல்லவில்லை... அவள் மனதில் கோபம் பொங்கி கொண்டிருந்தது.

  

அதே நேரத்தில் லக்ஷ்மி கிளம்பலாம் என்றபடி வீணாவை தேடி வரவும், இந்து கோபத்தை தன்னுள்ளே அடக்க வேண்டியாதாகி விட்டது!

   

அர்ச்சனாவை உடம்பை கவனித்துக் கொள்ள சொல்லி விட்டு லக்ஷ்மியும் வீணாவும்

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.