(Reading time: 7 - 13 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

  

"ரொம்ப டையர்டா இருக்கா அம்மா???"

  

மகளை பரிவுடன் பார்த்த அர்ச்சனா,

  

"நீ தான் ஒண்ணுமே இல்லாததை பெரிசாக்கிட்ட இந்து... எனக்கு ஒண்ணுமே இல்லை..." என்றாள்!

  

"ப்ச்... இப்போ பெருசா எதுவும் இல்லைன்னு தெரியும் அம்மா... ஆனால், அன்னைக்கு என்ன எதுன்னு புரியாம..."

  

இந்து தொடர்ந்து பேச அனுமதிக்காமல்,

  

"பிடிச்சாலும் பிடிக்கலைனாலும், நடக்க வேண்டியது நடந்து தான் ஆகும் இந்து! உன்னுடைய அம்மா ஆயிரம் வருஷம் உயிர் வாழ போறதில்லை தானே," என்றாள் மென்மையாக!

  

இந்துவிற்கு இந்த பேச்சு பிடிக்கவில்லை என்பது அவள் முகத்திலேயே தெரிந்தது. அதை புரிந்துக் கொண்டு, ஒரு புன்னைகையோடு பேச்சை மாற்றினாள் அர்ச்சனா.

  

"சொல்லு கண்ணா, நீ ஏதோ சொல்ல நினைச்ச மாதிரி இருந்தது..."

  

"ஆமாம் அம்மா... அப்பாவோட கம்பெனில நமக்கு இருக்கும் ஷேர்ஸ் எல்லாத்தையும் நந்தினிக்கு கொடுத்துட்டு, உண்மையை அத்தைக்கும் எல்லோருக்கும் சொல்லிடலாமா???"

  

இந்துவின் பேச்சை கேட்டு அர்ச்சனா திகைத்துப் போய் சில வினாடிகள் அமைதியாக அமர்ந்திருந்தாள். அம்மாவின் மன நிலை புரிந்ததால் இந்துவும் உடனே எதுவும் சொல்லவில்லை. சில வினாடிகளுக்குப் பின்,

  

"எனக்கு புரியுது அம்மா, இது சின்ன விஷயம் இல்லை! ஆனால் நந்தினியும் அவங்க அம்மாவும் பாவம் தானே," என்றாள்!

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.