(Reading time: 7 - 13 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

மெல்லிய தயக்கம் இழையோட!

  

"ம்ம்ம்...?"

  

"இல்ல.... ம்ம்ம்ம்... சித்தி உனக்கும் சஞ்சீவுக்கும் ஏதோ சண்டைன்னு சொன்னாங்க..."

  

நந்தினி பேசி முடிக்கும் முன்பே,

  

"ப்ச்... இது தேவை இல்லாத பேச்சு... வேண்டாம்..." என்றாள் இந்து.

  

"இல்ல... சித்தி நான் தான் உங்க இரண்டுப் பேருக்கும் நடுவுல ஏதோ செய்துட்டேனோன்னு சந்தேகத்தில என் கிட்டே கேட்டாங்க..."

  

எந்த வித உணர்ச்சியும் இல்லாமல் பேச நந்தினி முயற்சி செய்திருந்தாலும், அவளின் பேச்சிற்கு பின் இருந்த சங்கடம் புரிந்ததால்,

  

"சாரி நந்தினி... அம்மா ஏதோ தப்பா நினைச்சு கேட்டு இருப்பாங்க... எனக்கும் சஞ்சீவுக்கும் நடுவுல சண்டையும் இல்லை, எதுவும் இல்லை," என்றாள் இந்து தேற்றும் தோரணையில்!

  

"ஓ!" என்று நந்தினி சொன்னது, ‘நான் உன்னை நம்பவில்லை’ என்ற அர்த்தத்தில் ஒலிக்கவும்,

  

"நிஜம் நந்தினி, சஞ்சீவ் கீதா அக்காவோட ப்ரதர்-இன்-லா... அந்த விதத்துல எங்களுக்குள்ளே பரிச்சயம் இருக்கு... அவ்வளவு தான்..." என்றாள் இந்து வேகமாக!

   

நந்தினி அவளை வித்தியாசமாக ஒரு பார்வை பார்த்ததை தாண்டி வேறு எதுவும் சொல்லவில்லை!

  

 🌼🌸❀✿🌷

   

ன்று இரவு, அர்ச்சனாவிற்கு டாக்டர் கொடுத்திருந்த மாத்திரைகளை எடுத்துக் கொடுத்துக் விட்டு, பக்கத்தில் அமர்ந்தாள் இந்து.

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.