(Reading time: 7 - 13 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

கிளம்பினார்கள். அவினாஷ் தனியாக குழந்தை ரோஷினியை கவனித்துக் கொண்டு இருப்பதால் இருவரும் கிளம்புகிறார்கள் என்பதை அறிந்திருந்ததால், யாரும் ஆவர்களை தடுக்க முயற்சிக்கவில்லை!

   

அவர்கள் இருவரும் கிளம்பிச் சென்ற பின் இந்து தனியாக அதே சோஃபாவில் அமர்ந்திருந்தாள். எப்போதும் போல அவளின் கண் முன் சஞ்சீவ் வந்து நின்றான். இது சரி இல்லை என்று அவளுக்கே தெரிந்திருந்தது! ஆனாலும் அவளால் சஞ்சீவின் நினைவு வருவதை தடுக்க முடியவில்லை.

  

"இந்து!" யாரோ அழைத்ததில் திரும்பிய இந்து, நந்தினியை பார்த்து ஆச்சர்யப் பட்டாள்! என்ன சொல்வது என்று புரியாமல் பேருக்கு புன்னகைத்தாள்.

  

இந்துவிற்கு எதிரில் இருந்த சோஃபாவில் அமர்ந்த நந்தினி,

  

"எப்போ ஆஃபிஸ் வர ஆரம்பிக்க போற இந்து?" என்றாள்.

  

"ம்ம்... இன்னும் கொஞ்ச நாள் ஆகும் நந்தினி... எதுவும் கஷ்டமா இல்லையே..."

  

"கஷ்டம்னு இல்லை...ஆனால் எனக்கு இன்னும் எல்லா டிப்பார்ட்மெண்ட்டும் சரியா தெரியாது..."

  

"அது ஒரு பிரச்சனையே இல்லை... நான் நிலா கிட்ட சொல்லி உனக்கு வேண்டிய ஹெல்ப் செய்ய சொல்றேன்..."

  

"தேங்க்ஸ்... ஆனால் நீ சீக்கிரம் வந்தால் நல்லது..."

  

"பார்ப்போம் நந்தினி..."

  

பட்டும் படாமல் பதில் சொன்னவளை ஒரு பார்வை பார்த்து விட்டு,

  

"இந்து, இது உன் பர்சனல் விஷயம்... கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்காதே..." என்றாள் நந்தினி

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.