அதுவும் என் கிட்டே நீ எதுவும் சொல்லவே இல்லை???"
"நான் உன் வீட்டுக்கு சொல்லிட்டு தான் வரணுமா இந்து??? சரி, அதெல்லாம் இருக்கட்டும் நீ ஏதாவது சாப்பிட்டியா? உனக்கு காஃபி, டீ ஏதாவது போடனுமா????"
தோழியின் அன்பில் நெகிழ்ந்த இந்து,
"இப்போ எதுவும் வேண்டாம் வீணா," என்றாள் மெல்லியக் குரலில்!
🌼🌸❀✿🌷
காரை ஓட்டிய ராஜீவிடம் தாங்கள் போக வேண்டிய அட்ரஸை சொல்லாமல், தானே வழி சொல்வதாக சொன்னாள் காஞ்சனா! அப்படி அவள் வழி சொல்லி, ஒருவழியாக அவர்கள் வர வேண்டிய வீடு வந்து விட்டதாக காஞ்சனா சொன்ன போது தான் மற்றவர்கள் அவர்கள் வந்து சேர்ந்திருந்த இடத்தை கவனிக்கவே செய்தார்கள்! அந்த வீட்டை பார்த்ததும் கிட்டத்தட்ட அனைவருமே ஆச்சர்யப் பட்டார்கள்! முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல் சின்ன புன்னகையுடன் காரில் இருந்து இறங்கிய காஞ்சனா,
"கீதா, கண்மணி இரண்டுப் பேரும் சீக்கிரம் இறங்கி வாங்க. வரேன்னு சொன்ன நேரத்துக்கு போனா தானே நல்லா இருக்கும்,” என்றாள்!
🌼🌸❀✿🌷
வீணாவுடன் பேசிக் கொண்டே, ஓரளவிற்கு சரியாக வரத் தொடங்கி இருந்த தோசையை சுட்டு எடுக்க தொடங்கி இருந்த இந்து, மீண்டும் அவர்கள் வீட்டு அழைப்பு மணி ஒலிக்கவும், ஆச்சர்யமாக திரும்பிப் பார்த்தாள்.
"என்ன, இன்னைக்கு
{/f90filter}
காலையிலேயே வீடு ஒரே களை கட்டுது," என்றாள் அந்த ஆச்சர்யம் குரலிலும் எதிரொலிக்க!
"எல்லாம் காரணமா தான்! சரி, நான் போய் யார்ன்னு பார்த்துட்டு வரேன்," என்ற வீணா, இந்து