தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்
63. மனம் விரும்புதே உன்னை... உன்னை...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
சமையலறையில் தோசை கல்லுடன் போராடிக் கொண்டிருந்த இந்து, அவர்கள் வீட்டு அழைப்பு மணி சத்தம் கேட்டு, சமையலறை விட்டு வெளியில் வந்து எட்டிப் பார்த்தாள். அதற்குள் கனகா சென்று கதவை திறக்கவும், லக்ஷ்மியும், வீணாவும், குழந்தை ரோஷினியை தூக்கியபடி அவினாஷும் உள்ளே வந்தார்கள். அவர்களை ஒன்றாக அந்த நேரத்தில் பார்த்து ஆச்சர்யப் பட்ட இந்து,
"வாவ், இது என்ன சர்ப்ரைஸ்! அவினாஷ் நீங்களும் வந்து இருக்கீங்க! வாங்க வாங்க," என்றாள் உண்மையான உற்சாகத்துடன்!
கூடவே தோசை தீயும் வாசனை வரவும், "அடடா, இந்த தோசையும் போச்சா? இதோ வரேன்," என்றபடி அவசரமாக சமையலறையின் உள்ளே சென்றாள்.
அவளை பின் தொடர்ந்து வந்த வீணா,
"என்ன இந்து செய்ற???" என்றாள்.
இந்து பதில் சொல்லும் முன்,
"வேற என்ன வீணாம்மா, தோசை கல்லோட சண்டைப் போடுறாங்க," என்றாள் கனகா.
"நிஜமாவா???" என்று ஆச்சர்யப்பட்ட வீணா, அப்போது தான இந்துவை சரியாக பார்த்தவளாய்,
"கனகா, ஆன்ட்டிக்கு ஏதாவது ஹெல்ப் வேணுமான்னு கொஞ்சம் கேளேன்," என்றாள்
செய்தி புரிந்தவளாய், கனகா அங்கே இருந்து செல்லவும்,
"என்ன இந்து இப்படி இருக்க??? உன், முகமே சரி இல்லை! கொஞ்ச நேரமாவது தூங்கினீயா இல்லையா????" என இந்துவை பார்த்து பரிவுடன் கேட்டாள் வீணா.
"ப்ச்... நீ ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டாச்சா??? ஆமாம், என்ன இது காலையிலேயே விஜயம்?