சக்தியால் ப்ரியம்வதாவின் சமயோசித அறிவை மெச்சாமல் இருக்க முடியவில்லை.
“ஆமா, நீ பேசிட்டு இரு சத்யா. நான் போய் புக் வாங்கிட்டு வரேன்.” வார்த்தைகளால் அதை சத்யாவிடம் சொல்லிவிட்டு, கண்களால் ‘நான் சொன்னதை மறக்காமல் கேள்’ என்ற கூடுதல் செய்தியையும் சொன்னாள் சக்தி.
சக்தியும், ப்ரியம்வதாவும் அங்கிருந்து போன உடன், கலைவாணியும் சத்யாவும் பக்கத்தில் இருந்த சோஃபாவில் அமர்ந்தார்கள்.
“ப்ரியா அந்தப் பையனை அவுட் ஹவுஸ்ல தங்க வைக்கலாம்னு சொன்னப்போ நான் இப்படி எல்லாம் நடக்கும்னு நினைக்கவே இல்லை சத்யா. நமக்கு இருக்க பிரச்சனை போதாதுன்னு இதெல்லாம் வேற வந்து சேருது,” எனத் தொடங்கி கலைவாணி புலம்பி தள்ளினாள்.
சத்யா விரும்பியதும் அதே தான். அதனால் அதே ரீதியில் பேச்சை வளர்த்தாள
...
This story is now available on Chillzee KiMo.
...
்லா ரகமான வில்லத்தனமும் செய்றாங்க. அந்த வினாயக்கை நீ பார்த்திருக்கீயா? இவனை போல நல்லவன் கிடையாதுன்னு சொல்ற அளவுக்கு அப்பாவியா முகத்தை வச்சிருப்பான்.”
“வினாயக் தான் கொலை செய்தவன்னு நீங்களும் நினைக்குறீங்களா?”
“வேற யாருக்கு செத்துப் போன அந்த ஆளை தெரியும்? ப்ரியாக்கும், வினாயக்குக்கும் தான் அந்த ஆளை தெரியும். ப்ரியா எங்க கூட இருந்தா.”