மதியூர் மிஸ்டரீஸ் : 2 : தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 23 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
சக்தி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று சேர்ந்தப் போது தென்றல்வாணன் அங்கே தான் இருந்தான். சக்தியை எதிர்பார்த்தவன் போல வரவேற்றான்.
“சீக்கிரமே வருவீங்கன்னு எதிர்பார்த்தேன் சக்தி!”
சக்தி அவனின் வரவேற்பை கண்டு அசரவுமில்லை, அலட்டிக் கொள்ளவுமில்லை!
“சும்மா நக்கல் செய்யாதீங்க தேன். சொல்லுங்க எதை வச்சு வினாயக்கை அரெஸ்ட் செய்தீங்க?”
“சக்தி, இது ஆக்டிவா இருக்க கேஸ். உங்களுக்கு நம்ம ப்ரோசீஜர் தெரியாதா? நான் உங்க கிட்ட அப்படி டீடெயில்ஸ் ஷேர் செய்யலாமா?”
“உங்க ப்ரூஃப் மேல உங்களுக்கு நம்பிக்கை இருந்தா கட்டாயம் ஷேர் செய்யலாம் இன்ஸ்பெக்டர்!”
“சக்தி, நீங்க இந்த கேஸுக்கு முக்கிய சாட்சி.”
“அதுல உங்களுக்கு சந்தேகம் வேண்டாம் இன்ஸ்பெக்டர். நான் பார்த்ததை எங்கே வேணா சொல்லுவேன். அதுல எந்த மாற்றமும் இல்லை.”
“தேங்க்யூ சக்தி. இறந்துப் போன சந்திரமௌலி எதுக்கு மதியூர் வந்திருந்தார்ன்னு தெரியுமா? வினாயக் தான் அவரை இங்கே வரச் சொல்லி இருக்கான்.”
“எதுக்காக?”
“அதை வினாயக் இன்னும் சொல்லலை. இது வினாயக் ப்ரீ பிளான் செய்து செய்த கொலை. அதனால அவன் சந்திரமௌலிக்கு ஏத்த விதத்தில ஏதாவது சொல்லி இங்கே வர வச்சிருக்கலாம்.”