மதியூர் மிஸ்டரீஸ் : 2 : தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 24 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
சக்தி சீரியசாக சொன்னதைக் கேட்டு, சத்யா சிரித்தாள்.
“எதுக்கு நீ சிரிக்குற?”
“அந்த எஸ்டேட்ல தான் எல்லாமே நடந்துச்சு. அதுக்கும் கொலைக்கும் சம்மந்தம் இருக்குன்னு ஃபர்ஸ்ட் ஸ்டான்டர்ட் படிக்குற பாப்பாக்கு கூடத் தெரியும். நீ என்னவோ அதைப் போய் பெரிய டிக்லரேஷன் போல சொல்றீயே! சிரிக்காம வேற என்ன செய்றது?”
சக்தி சத்யாவிற்கு டிடக்டிவ் லுக் ஒன்றை பதிலாக கொடுத்து விட்டு அமைதியாக இருந்தாள்.
“பதிலுக்கு சல்லுன்னு எரிஞ்சு விழாம அமைதியா இருக்கீயே சக்தி. இந்த மாற்றம் எப்படி? டாக்டர் சாந்ததுரையோட ஸ்பெஷல் ட்ரீட்மென்ட்டோட மாயஜாலமா?”
“டாக்டர் இல்லை, போலி டாக்டர்ன்னு சொல்லு! அவனுக்கு மாயஜாலமாவது மண்ணாங்கட்டியாவது!”
“அவரை இனிமேல் போலி டாக்டர்ன்னு சொல்லக் கூடாது சக்தி. ஊரெல்லாம் அவரைப் பத்தி புகழ்ந்து தள்ளுறாங்க. அந்த வீட்டுக்கு கும்பலா வந்த பாட்டிங்க எல்லோரும் இப்போ அந்த ஹாஸ்பிட்டலுக்கு கும்பலா போறாங்களாம். டாக்டர் சாந்ததுரையை பார்க்க அப்படி ஒரு கூட்டம் அலை மோதுதாம். லேட்டஸ்ட் மதியூர் நியூஸ் இது!”
“இப்போ எதுக்கு இந்த பேச்சு சத்யா? நாம போற வேலையில கான்சன்ட்ரெட் செய்வோம். எஸ்டேட் போய் பேசும் போது, மத்த கேள்விங்க கேட்குறதோட சேர்த்து, அப்படியே நைஸா கொலை செய்த ட்ரோன் இன்னும் கிடைக்கலை அதான் வினாயக் வெளியே வந்துட்டார். ட்ரோன் கிடைச்சா வினாயக் மேல இருக்க கேஸ் ஸ்ட்ராங் ஆயிடும்னு எல்லோர் கிட்டேயும் சொல்லி வை. சொல்லும் போது அவங்கவங்க ரியாக்ஷனை கவனி.”
“எதுக்கு சக்தி இப்படி சொல்ற?”
“கொலையை செய்தவங்க எந்த அளவுக்கு ஸ்மார்ட் ஆனவங்கன்னு கண்டுப்பிடிக்க போறோம்.