(Reading time: 33 - 65 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

சமாதானப்படுத்த அதையும் ஒப்புக்கொண்டு வேடிக்கை பார்க்கலானார் சுசித்ரா.

   

கருணாவோ

   

”இவள் எங்கம்மா மாதிரியிருக்கா பேசாம இவளை கட்டிக்கிட்டா என்னை தொல்லை பண்ண மாட்டாளே”

   

என நினைக்க தினகரனோ கருணாவிடம்

   

”என்ன அண்ணா இந்த பொண்ணை பிடிச்சிருக்கா”

   

“அம்மாவை போல இருக்கா”

   

“முதல் நாள் பார்த்து ஆசைப்படாத பொறு 1 மாசத்தில என்ன ஏதுன்னு அவளை பத்தி தெரிஞ்சிக்கிட்டு அப்புறமா முடிவு எடு” என சொல்ல கருணாவும்

   

”ஆமாம்டா எதுக்கு அவசரம் பார்த்துக்கலாம் எங்க போயிட போறாங்க இங்கதானே இருக்கனும்”

   

“தாத்தாவுக்கு இந்த மாதிரி அடக்கமான பொண்ணுங்கன்னா ரொம்ப பிடிக்கும்”

   

“எதை வைச்சி சொல்ற”

   

“பாட்டிக்கிட்ட திட்டு வாங்கியும் ஓடாம இருக்க இந்த பொண்ணால தான் முடியும். அந்த ஒரு காரணத்துக்காக கூட தாத்தா இவளை செலக்ட் பண்ணுவார்ன்னு எனக்கு தோணுது அண்ணா”

   

“பார்க்கலாம் பொறு இன்னும் பாட்டி வரலையே அவங்க வந்த பின்னாடி அவங்க கூட்டிட்டு வர்ற பொண்ணு எந்த லட்சணத்தில இருக்கோ தெரியலையே” என நினைக்கும் போதே பாட்டி வந்தார் அவருடன் ஒரு பெண்ணும் வந்தாள்.

   

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.